சோறு போட்டவன்
எதிர் வீட்டிலே இருக்கிற
இளங்கோ கெட்ட பிள்ளை
நீதான் நல்ல பிள்ளை கண்ணா
என்று சோறூட்டிய
அன்னையர்களுக்கெல்லாம்
வளர்ந்த கண்ணன்
அமெரிக்கா சென்ற நாளிலிருந்து
இளங்கோதான் சோறு போடுகிறான்
===
மெய்யன் நடராஜ்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
