நட்சத்திரங்கள் விழும் இரவினில்

நட்சத்திரங்கள் விழும் இரவினில்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மலையுச்சியில் பனிபடர்ந்து உருகியொழுக மண்ணறுந்து
கற்கள் பெயர்ந்து உருண்டு
துண்டாகி துளாகி துகளாகி
கடைசியில் மணலாகி ஓடும்
நீரோடு கலந்தோடும் போல்
வானமண்டலத்து மின்கற்களதனை
நட்சத்திரங்கள் விழும் இரவினில் என
காண்போர்க்கு அதிசயம் ஆச்சரியம் சில பாதியில் சாம்பலாகி மறையும்
சில பூமியில் வந்து விழும் அதை
காண்போர் கதிகலங்கி போவர் கெட்ட
நேரமென கணக்கிட்டு கொள்வார்
பச்சை நிறம் பார்த்திடச் சொல்வார்
மாதருள் ஒரு சாராரை காமுகத்தோர்
நட்சத்திரங்கள் விழும் இரவினில் என
சிவப்பு விளக்கு வீதியில் நிறுத்தி
அதனால் பல குடும்பம் அழிகிறது அவ்
வேடிக்கை காட்டும் படலம் ஒழிந்திட
நட்சத்திரங்கள் இனி விழாது இரவினில் என அழியும் குடும்ப துயர் துடைப்போம்
°°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி
கவிதைமணி யில் எம் கவிதை
மும்பை மகாராஷ்டிரா