அன்புள்ள அப்பா
அப்பா - என்ற ஒரு சொல்போதும்
தடைகள் அனைத்தையும்
தகர்த்தெரியும் சக்தி
நம்முள்ளே தோன்றும்..
நான்
சோர்ந்து அழும்போதெல்லாம்
சேர்ந்து நடப்போம் என - தன் கையோடு
சேர்த்து அழைத்துச்சென்று வெற்றியை
சுவைக்கச்செய்து ஓரம் நின்று
கூர்ந்து கவனித்த அற்புத மனிதா..!
தாயும் பத்து மாதம் தான் சுமந்தாள் - நீதானே
மத்தமாதமெல்லாம் சுமந்தாய்.?
முதலில் சொன்னது வயிற்றில் !
இரண்டில் சொன்னது வாழ்வில் !
தாய் - பாலூட்டி வளர்த்தாள் - நீயோ
தன்னம்பிக்கையும்,
விடாமுயற்சியும் சேர்த்து என்னை
தாலாட்டியல்லவா வளர்த்தாய்..!
கஷ்டங்கள் பல உன் தோளில்
இருந்தாலும் - ஒருநாளும் என்
இஷ்டங்களில் தடைபோட
எண்ணியதில்லை.
பலநேரம் அவமானங்கள்
சிலநேரம் தன்மானங்கள் – என
இரண்டையும் ஒரு சேர கலந்து - தன்
வாழ்வை தானே செதுக்கிய சிர்ப்பி நீ..!
அளவில்லை உங்களை அன்புக்கடலில் ஆழ்த்த .!
தமிழில்லை என்னிடம் உங்களை தாலாட்டி வாழ்த்த.!
வாழ்க என் தந்தையே!
என் நினைவெல்லாம் உன் சிந்தையே!!