அனுமதி

பேருந்தில் என் அருகில் அமர

அனுமதி கேட்கிறாய் நீ!

உள்ளத்திலேயே இடம்
கொடுத்த பிறகு!

தயக்கம் என்னடி!

என் நெஞ்சிலே சாய்ந்து கேள்!

என் இதயத் துடிப்பின் சத்தம்!

உன் மேல் வைத்திருக்கும்
காதலை புரியவைக்கும்!

எழுதியவர் : கவிதாயினி செ.மேகலாதேவி (21-Oct-18, 8:48 pm)
Tanglish : anumathi
பார்வை : 117

மேலே