கவிஞனின் கனவு

கவிஞனின்
கனவது சிறகைவிரித்து
பறந்து கொண்டே செல்வது
திசையும் இலக்கும்
இல்லாதது!!!
சோர்விலாமல்
மனத் தொய்வின்றி
மாபெரும் போராட்ட
யுத்த களத்தை
வெற்றிக் கொள்வது
ஆகம விதிகளை
கற்றுத்தருவது
காட்டாறாய் கட்டுக்கு
அடங்காமல் பாய்வது
சுழலும் பூமியை
சுத்தாமல்
ஓய்வெடுக்க செய்வது
தீக்குச்சியாகி சூரியனையே
சுட்டுவிடச் செய்வது
எழுத்தெனும் ஆயுதத்தை
எல்லையில்லா கற்பனையோடு
எட்டு திக்கும் பரவச் செய்வது
யுகம் யுகமாய்
யுத்த தாகத்தோடு
வாழ்வின் இறுதிவரை
போராடி போராடி
பல வெற்றியை
பகை கொண்ட
வெறியாளர்களை
தலை வீழ்த்தி
தன்னகத்தே பாயும்
அம்புகளை துச்சமாக்கி
விருட்சமாய் வீற்றிருக்கும்
வீழாமல் தலை நிமிர்ந்து
அகண்ட பூமி தன்னில்
நிலை நிறுத்த செய்வது!!!

எழுதியவர் : உமாபாரதி (1-Nov-18, 4:44 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : KAVIGNANIN kanavu
பார்வை : 249

மேலே