கனவு மங்கை

மயங்கும் அந்திமாலைபொழுது
என் வீட்டு மஞ்சத்தில் நான்
திறந்திருந்த ஜன்னலின் வழியாய்
வானைப்பார்த்தே தூங்கிவிட்டேன்
இனிய கனவு ஒன்று கொண்டேன்
அதில் மஞ்சள் வானிலிருந்து
செவ்வரளி சிவப்பில் தங்கப்பதுமையென
இறங்கிவந்தாள் ஒரு கன்னிமகள்
சுந்தரி, சௌந்தரி,ஒய்யாரி அவள்
என்னருகே வந்து, என் கைகளை
தன கைகள் கொண்டு , மஞ்சத்திலிருந்து
என்னை எழுப்பி , மிக்க நளினமாய்
தன்னருகே தன்னோடு சேர்த்து
தன செங்கமல இதழ்கள் விரித்து
என் அதரத்தில் சேர்த்து முத்தம் தந்தாள்
பின் யாழினும் இனிய தன குரலால்
'அன்பே வா' இதோ நான் உந்தன் காதலி '
என்றாள், ....................

கனவு கலைந்தது ..............கண்களை கசக்கி
மஞ்சத்திலிருந்து ஜன்னலருகே வந்த நான்
மீண்டும் வானத்தைப் பார்த்தேன்
என் கனவு கன்னிகை அங்கு இல்லை....
அந்தி வேளை, மஞ்சள் வானம் அங்கோர்
சிவந்த மேகம் .................. கனவில் கண்டா காட்சி
அந்த கன்னிமகள் மட்டும் காணவில்லையே
அந்த கனவு கன்னியைக்காண அலையுதே
என் மனமும் ...........

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Nov-18, 2:47 pm)
Tanglish : kanavu mangai
பார்வை : 397

மேலே