புதுமாப்பிள்ளை

புதுமாப்பிள்ளை ஆசையாய் கேட்ட முருங்கைக்காய் சாம்பாரோடு , முத்தங்களையும் சமைத்து காத்திருக்கிறாள் சிறுக்கி....

பந்தியில் பாவை
முந்தி விரிக்க,

கலைந்த குங்குமத்தில்
காலை சந்து சிரிக்க

முந்தானை மறுபடி சரிசெய்யும்
பெண்ணின் மனதைரியத்திற்கு முன்

காலையில் வேட்டியை கீழிறக்கி
வெட்கப்படும் புதுமாப்பிள்ளைக்கு
என்னமாக வழிகிறது அசடு.....

எழுதியவர் : மணிகண்டன் சேகா (11-Nov-18, 10:06 am)
சேர்த்தது : மணிகண்டன் சேகா
பார்வை : 48

மேலே