மலரும் மங்கையும்

மௌனமாய் இருக்கையில்
அவள் அதரம் சிவப்பு ரோசா மொட்டு
அவள் சிரிக்கையிலே அது
ரோசாப்பூ ....... இப்படி பூவென்றிருக்கும்
இவள் இதழ்கள் திறந்து மூடும் சேதமின்றி,
பாவம் , அந்த மலர், ரோசா , மொட்டாய்
யவ்வனத்தில் மிளிர்ந்து, மலர்ந்து கன்னியாகி
அழகை கக்கவைக்கும் முன் கைபட்டு சிதைந்துபோகுதே

பெண்ணே, உந்தன் சிரிப்பில் உன் அதரங்கள்
குவிந்து, விரியும் , பின்னர் அலங்காமல் மூடிக்கொள்ளுதே
உன் மௌனத்தில்...... நீ மலரோடு சிறந்தவள் அல்லவா!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Nov-18, 3:25 pm)
Tanglish : malarum mangaiyum
பார்வை : 94

மேலே