தமிழால் தமிழர் கெட்ட வரலாறு

தமிழால் தமிழர் கெட்ட வரலாறு

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
(திருக்குறள் எண் : 4)

பரிமேலழகர் உரை:
பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.)


கடவுளுக்கு யாரும் வேண்டியவரோ அல்லது வேண்டாதவரோ என்ற பாகுபாடு பாரா பட்சம் கிடையாது. அப்படிப்பட்டவர்தான் இந்துக்களின், தமிழர் வணங்கும் கடவுளின் தத்துவக் குணம் என்பதைத் தமிழ் வள்ளுவப் பெருந்தகையார் கண்டுபிடித்துச் சொன்னார்.

ஒண்டவந்தப் பிடாரி ஊர்ப் பிடாரியை ஒட்டியதாம் என்ற பழமொழியை உண்மைத் தமிழர்கள் சொல்லுவார்கள். வந்தவன் இருப்பவனைத் துரத்தினால் இந்தப் பிடாரிப் பழமொழியை கெட்ட புத்திக்கர்களைக் குறிக்கப் பயன்படுத்திக்கொள்வார்கள். பிடாரி என்பது ஒரு துர்தேவதையாம்.

இக்கட்டுரையை படிக்குமுன் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது நாம் தமிழர்களா? அல்லது திராவிடர்களா? தமிழர்கள் கடவுளைத் தொழுதார்களா இல்லையா? தமிழன் கடவுளைத் தொழுதான் என்றால் அவன் முட்டாளா? தமிழைப் பேசும் இன்றையத் திராவிடனுக்கு கடவுள் இல்லையாம். ஆதிதிராவிடன் சாமி கும்பிடவில்லை என்று யார் சொன்னது? இன்றையத் திராவிடக் கட்சியினரா சிந்து வெளியை அகழ்ந்தது? ஆராய்ந்தது? இவர்கள் அகழ்வாராய்ச்சியோ அல்லது வேறு எதையாகிலும் கண்டுப் பிடிக்கவுமில்லை என்று அனைவருக்கும் தெரியும். திராவிடர் கடவுளைக் கும்பிட்டார்கள் என்று திராவிடனைக் கண்டுபிடித்த வெள்ளையனே சொன்ன போது இங்கிருக்கும் பொய்த்திராவிடர் கடவுளை ஏன் வணங்க மறுத்தார்? கடவுளைப் பற்றிப் பேசினாலே சிரிக்கிறாரே இவர் உண்மையில் தமிழனுக்குக்குத்தான் பிறந்தாரா? இவனை ஆதரிப்பவர்கள் யாரும் உண்மைத் தமிழர்களேக் கிடையாது. இங்கேத் தமிழர்கள் சாமியையும் கும்பிட்டுக் கொண்டு இந்தப் பொய்த் திராவிடர்களை ஆதரிப்பதேன்?

காரணம் தமிழனுக்கு யார் புத்தி சொன்னாலும் பிடிக்காது, கேட்கமாட்டான். காமெடி செய்பவன் எதைச் சொன்னாலும் கேட்பான். இதுதான் இன்றையவரை நடந்து வருகிறது.



திராவிடம் என்ற சொல் எந்தத் தமிழ் இலக்கியத்துள் காணக் கிடைக்கிறது?
- இயல் தமிழிலா?
- இசைத் தமிழிலா?
- நாடகத் தமிழிலா?

அதை எக்காலத்தில் எந்த அரசன் ஆதரித்தான்? எந்தப் புலவர் எழுதினார்? யாரால் கல்வெட்டில் குறிக்கப்பட்டது? விளக்கத்துடன் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். திராவிடம் நம்முள் நுழைந்ததால் தமிழன் என்னென்ன இழந்தான்? அவற்றை நீங்களே உங்கள் மனதில் பட்டியலிட்டுப் பாருங்கள். பெருத்த இழப்புத் தன்மானம், பின் பக்தி, கல்வி, உரிமைகள், சமயம், பண்பாடு, மரபு, கலாச்சாரம், ஒழுக்கம், நீதி நெறி முறைகள் ஒப்புரவு, ஈவு, இரக்கம், சுதந்திரம் இவை அனைத்தும் இழந்தான். கடைசியில் மானம் கெட்டு நிற்கிறான். தமிழன் இப்போதும் விழித்தெழா விட்டால் உண்மைத் தமிழனும் அவன் பக்தி மார்க்கமும் காணாது மறைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தவறினால் தமிழன் பேடியாய் நிற்கப் போவது நிச்சயம்.

இதைப் படித்து யாரும் தங்களுடைய கருத்துக்களையும், கண்டு பிடிப்புகளையும், மறுப்புகளையும், இங்கு வெளிப்படுத்தாதீர்கள் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப் படுகிறது. காரணம் இந்தக் கட்டுரை பழந்தமிழ் பக்தர்களுக்காக அவர்களுடைய தற்காலநிலை, ஆற்றாமை மற்றும் ஆதங்கத்தையும் நினைத்து எழுதப்பட்டது. நீங்கள் யாராக இருப்பினும், வேண்டுமானால் உங்களுடைய ஆதங்கத் துடிப்பைத் தனியாவர்த்தனமாய் எழுதுங்கள். பிடிக்காதவர்கள் இதை படிக்க வேண்டாம்....!

இன்று பாரத நாட்டில் மொத்தமாகவும், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் மக்களின் அமைதி வாழ்க்கை மாபெரும் கேள்விக் குறியாக இருக்கிறது. இன்றுத் தமிழ்நாட்டில் யார் யாரோத் தன்னைத் தமிழன் என்றுச் சொல்லிக் கொள்கிறார். தமிழர் பண்பாடில்லாமல் வீரன்போல் கத்தியைக் காட்டுகிறான், மிரட்டுகிறான். தமிழர் கத்தியோடேப் பிறந்தவர், வீரம் மிகச் செறிந்தவர்.

தமிழ்க்கடவுள் முருகனை வணங்காதவன் தமிழனா? தமிழன் வணங்கிய ஐந்திணைத் தெய்வங்களான இந்திரன், மால், துர்க்கை, முருகன், வருணன் போன்றவைகளை வணங்க மறுப்பவன் தமிழன் கிடையாது. இதைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் பச்சோந்திகள் உணர்ந்து பேச வேண்டும். ஆனால் பச்சைத் தமிழன் என்றுச் சொல்லிக் கொள்பவர் உணரவேண்டும். தமிழரின் கடவுளர் எனும் படுக்கும் பாய் வேண்டாமாம், போர்வை எனும் தமிழ் மொழி வேண்டும், தமிழ் இலக்கியம் மட்டும் வேண்டுமாம். கடவுளைக் குறிப்பிடாதத் தமிழ் இலக்கியம் ஏது ? எதுவும் இல்லையே...!

இன்றைக்கு சுமார் ஆயிரத்து முன்னூறு வருடம் கழித்து கமல ஹாசன், பள்ளிச் செல்லாத ஏகலைவன், பக்தியில்லாதவன் ஏன்று சொல்லிக்கொள்ளும், நடிக்கும், பார்ப்பனர், சொல்கிறார் பாண்டியன் சமணரை அநியாயமாகக் கொன்றானாம். அன்றைய பாண்டியன் இதைக் கேட்டிருந்தால் அந்தக் கூத்தாடியையும் கழுவிலேற்றுங்கள் என்று தானேச் சொல்லியிருப்பான். அன்றையத் தினத்தில் கடவுள் இல்லை என்று எவனாவது சொல்லிக் குழப்பம் விளைவித்திருந்தால் வேந்தர்களும் மாமன்னர்களும் அவனது வம்சத்தையே நிர்மூலமாக்கி விடுவார்கள்.. இப்போதெல்லாம் நடிகன் வளர்ந்துவிட்டால் தன்னைப் பெரிய அறிவாளியாகத் நினைத்துக் கொள்கிறார். தானும் நாட்டையாளும் அரசனாக வேண்டும் என நினைக்கிறார். அவர்களை மக்கள் தேர்ந் தெடுக்கும் பட்சத்தில் யாரும் அதை ஆட்சேபணைச் செய்ய முடியாது. இவர்கள் மீண்டும் இங்கிருக்கும் கொஞ்ச நஞ்சம் கடவுள் பக்தியை அழித்து விடுவார்கள். காரணம் இவர்களெல்லாம் திராவிடத்திற்கு ஜால்ராப் போட்டவர்கள் தானே? மேலும் தமிழை ஆழ்ந்துப் படித்து உண்மையை அறிந்து கொள்ளாதவர்கள்.

சைவமும் வைணமும் தமிழ் நாட்டில் தழைத்தோங்கியதே உண்மை. சமணர்களின் கடவுளர்கள் பொய் என்று கருதிய கூன் பாண்டியன் - எட்டாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றிக் கொன்றான். அது மன்னவன் கட்டளை. அவனே தெய்வங்களின் முதல் பிரதிநிதி. அவனை அப்போது எவன் எதிர்த்திருந்தாலும் வெட்டுண்டு இறந்து போயிருப்பர். வடசமண மதத்தை ஒழித்தது பாண்டிய மன்னன். அவன் மீண்டும் சைவத்தை தழுவி ஆதரித்தான். இது சரித்திரம். சரித்திரம் பேசவும் படிக்கத்தான். அப்படி நடந்த விஷயத்திற்கு ஆயிரத்து முன்னூறு வருடம் கழித்து ஒப்பாரி வைப்பவரை என்னவென்று சொல்வது? தமிழ் நாட்டில் நடக்கும் அசிங்கம், அட்டூழியம், மதவெறியர் செய்யும் அட்டகாசம் எதையும் இதுநாள்வரை கண்டுகொள்ளாமல் பணவசூல் பற்றி கவலைப் பட்டவர்கள் தானே இவர்களெல்லாம். திடீரென்று நாட்டை திருத்த வந்ததேன்?

எவரோ ஒருவர் பெரியார் மேடையில் திருஞான சம்பந்தர் சிறுவயது பார்ப்பனன். அவன் எட்டாயிரம் சமணரைக் கொன்றான் என்கிறார். முட்டாள்தனமான அபிப்பிராயத்தை யார் இப்போது கேட்டது? இவரிடம் இதைப் பற்றி யாராவது கேள்வி கேட்டார்களா? இவர் நேற்றுப் படித்ததை இன்று எங்காகிலும் ஒப்பிக்கவேண்டும் என்று நினைப்பவர், எதைப் படித்தாலும் அந்தக் கதாநாயகர்களை இழிவுபடுத்தும் குக்கல். இப்போது போல மன்னர் காலத்தில் இவர் கேள்விக் கேட்டிருந்தால் கதி என்னவாகி இருக்கும். பண்டைய சரித்திரம் இவருக்கு மட்டுமாத் தெரியும்? எல்லோரும் படித்ததை ஏன் புதிய சட்டைப் போட்டுக் காண்பிக்கிறார். படித்த சிலப் பெரியார் கட்சியினரும் அவர் பேசியதை வாய்ப் பிளந்துக் கேட்கிறார்கள். இது மிக ஆச்சரியம். இப்படிப் பேசியதைக் கேட்ட படிக்காத கருப்புச் சட்டைக்காரர்கள் கூட கைத்தட்டவில்லையே ஏன் ?

படித்தவர்கள் அசிங்கம் என்றுக் கண்டு ஒதுக்குவார். காரணம் இவருக்குக் குலம் கிடையாது. கோத்திரம் கிடையாது. சிவன் கிடையாது. சைவம் பிடிக்காது. தமிழர் பிடிக்காது. தமிழ் எனும் மொழி மட்டும் தமிழரைப் பற்றிப் பேசிக் கெடுப்பதற்காக வேண்டுமாம். தமிழ் மாமன்னர்கள் பிடிக்காது. தமிழர் வீரம் பிடிக்காது. தமிழர் கடவுள் பிடிக்காது. ஆனால் பெரியார் பிடிக்கும், புரியாத புத்தனுக்கு வால் பிடிப்பார், வக்காலத்து பேசுவார். இவரும் ஒருவகையில் வடநாட்டு சாமியான புத்தனுக்கு விளக்குப் பிடிப்பவரே. இட்டுக்கட்டிக் கட்டுக் கதை சொல்வதில் கைத்தேர்ந்தக் கில்லாடி. ராஜராஜனையும் காந்தியையும் ஏசுகிறார் என்றால் மக்கள் இவரைத் தூக்கிக் கொண்டாடுவார்கள், பயப்படுவார்கள் என்று நினைக்கும் தரங்கெட்டத் தமிழனிவர். இவர் மேடை ஏறி பேசினால் கூலி உடனடியாகக் கொடுத்து விடுகிறார்கள் போலும். தமிழரின் மாபெரும் வீரன் ராஜராஜ சோழனைக் கூட "ரவுடி" என்கிறார் இந்தக் கைக்கூலியான ரவுடி. 1000 வருட சம்பவங்களைப் பக்கத்திலிருந்துப் பார்த்தவர் போல் சாதித்துப் புளுகுவார்....!

ஒழிந்துபோன புத்தமதத்தை இங்கேக் கொண்டுவர முடியாவிட்டாலும் கேவலமான ஜென்மங்கள் அவனை ஆதரித்துப் பேசுகின்றார். புத்தன் ஓர் அரசன். அந்த மதத்தை அரசர்களே ஆதரித்தனர். அம்மதம் ஆண்டிகள் ஆரம்பித்து வளர்ந்த மதமில்லை. அன்று ஏதோ சில அரசர்கள் புத்தமதத்தை ஆதரித்தார்கள். பிறகு அவர்களே அழித்தார்கள். நாட்டைப் பற்றியக் கவலை அரசர்களுக்குத் தானே? அப்போது புத்தத்தை பேசி ஆதரித்தது வேறு ஆட்களில்லை, அந்த அரசர்களேத்தான். அரசனை ஆண்டிகள் நெருங்க முடியாது. இந்த ஆண்டிகள் இன்று வேண்டுமானால் கழக அனுதாபிகள் நடத்தும் கூட்டத்தில் கைக்கூலி பெற்று புகழ் பெற்ற மன்னர்களை வசை பாடலாம். சுயசரிதை எழுதிய காந்தியைத் தாக்கலாம், அந்தக் காலமாயின் நிச்சயமாய் இவர் ஒருத்தொடை நடுங்கியாகத்தான் இருந்திருப்பார்.

திராவிடக் கழகம் பெயரில் பலப்பல முன்னேற்றப் பெயர் இணைத்துக் கொண்டப் பலக்கட்சித் தொண்டர்கள், மதம் மாறிய முஸ்லீம்கள். மதம் மாறியக் கிருத்துவர்கள், மதம்-விட்டு-மதம் கலப்பு மணம் செய்துகொண்டவர்கள் சேர்ந்து கொண்டு தமிழர்கள் என்கிறார்கள். இவர்கள் எல்லோரும் திராவிட மற்றும் தற்போது முளைத்திருக்கும் தமிழ் என்ற கட்சிகளில் சேர்ந்து கொண்டு தமிழ்க் கடவுள்களை வணங்கும் தமிழர்களை ஓரங்கட்டி விட்டு தாங்கள்தான் தமிழர்கள் என்று மார்தட்டிக் கொண்டு எல்லோரையும் மிரட்டுகிறார்கள்...!

போதாக் குறைக்கு ஐயோப் பாவமாகச் சினிமாவில் நுழைந்து, வளர்ந்து பெரிய நடிகனானப் பின் அவரவர்க்கு ரசிகர்கள் மன்றங்கள் வைத்துத் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். சினிமாவைக் காசுகொடுத்துப் பார்க்கும் கும்பலுக்குச் சங்கம் ஏன் ? அதனால் என்ன லாபம்? இதுவும் இப்போது கெட்டுப்போய் விட்டது. தற்சமயம் ஒருவன் பேனரை கிழித்தானென்று அதைச் சாக்காக வைத்துக் கேவலமாக அரிவாளைக் காட்டி மந்திரி முதல் எல்லோரையும் தொலைக்காட்சி ஊடகங்களில் எமத்தூதுவர்களாகத் தோன்றி மிரட்டுகிறார்கள்.

ஒரு பாதிரியோ பெரிய பட்டாக் கத்தியை வைத்துக் கொண்டு கர்த்தரை இழிவாகப் பேசினால் அவர்கள் தாய் தகப்பனாக இருந்தாலும் கூட அவர்களையும் வெட்டுங்கள் என்றுத் தொலைக் காட்சியில் ஏழு வயது நிரம்பாத ஆறேழு, ஆண், பெண் குழந்தைகளுக்குப் பாடம் போதிக்கிறார்.அது பாராட்டவேண்டிய தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமான மிகவும் அபூர்வமானக் காட்சி. ஆப்ரஹாம், ஜேகப்பின் கதை சொல்லிக் கொடுக்காமல் உருப்படாத தீவிரவாதம் போதிக்கிறார். அவர் முகத்தைப் பாருங்கள் சாத்தான்போலவேக் காட்சித்தருகிறார், கையில் நீளமான கத்தியுட,ன். - பாவம் குழந்தைகள்...! பாதிரியிடம் இந்தப் பாடம் கேட்கவா பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்பினர். இந்தப் பாதிரி இஸ்ரவேலில் இல்லை. ஜெருசலேமில் இல்லை, லண்டனிலோ, பிரான்சிலோ இல்லை. வள்ளுவன், இளங்கோ, கம்பன், நக்கீரன், சேக்கிழார், அவ்வைப் பிறந்தத் தமிழ்நாட்டில் அவதரித்த தவக்குழந்தைதான் அறிவில்லாமல் பேசுகிறது. வேறுமதத்திற்கு போனவர் பிறகு ஏன் திரும்பவும் அதே நினைப்பில் இருக்கிறார்? அவர் தமிழனா ? இல்லை கிருத்துவந்தானே? பின் ஏன் குருவிக்காரர் கும்பல் போல கூச்சலிடுகிறார் ? தமிழ் நாட்டில் இந்த அறிவாளியை ஊக்கப்படுத்தும் பேரறிவாளன் யார்? இவர் தமிழ் நாட்டில் வாழத்தகாதவர், உடனடியாக இஸ்ரவேலுக்கோ அல்லது பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கோ அனுப்பப்பட வேண்டியவர். இவர்கூட எல்லையோர பாதுகாப்பிற்கு தகுந்தவர். அமெரிக்காவாக இருந்தால் மார்ஷல் லாப்படி கண்டிப்பாய் இவரை ராணுவத்திற்கு அனுப்பிபியிருப்பான். கத்தியை பிடித்து ஆட்டுகிறாரே ஏன்? வேறு மதத்தவரை மிரட்டுகிராராம். ஓடியவர் ஓடுகாலிதானே? அதனால்தான் ஓலமிடுகிறது போலும்.

நம் தமிழ்நாடு எப்படி முன்னேறி இருக்கிறது பாருங்கள். இவர்கள் ஜெயிலில் இருக்க வேண்டிய ஆட்கள். இவர் தேசத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் தேசத் துரோகக் குற்றமே செய்திருக்கிறார். முகநூலையும் யூ ட்யூபையும் நாடு கெட்டுக் குட்டிசுவரானப் பிறகுதான் சென்சார் செய்யுமா இந்தப் பேரரசு? ஜெயிலில் இருக்க வேண்டிய நாட்டுப்பற்று இல்லா வெறிபிடித்தப் பைத்தியம். பச்சிளம் குழந்தைகளைக் கூடத் தூண்டி விடுகிறது. பிறமதத்தினரையும் மக்களையும் பயமுறுத்துகிறதாம். இதையா ஆதரிக்கிறது கிருத்துவம்?

இப்போது ரவுடிகள் எங்கெங்கும் வளர்ந்து பெரியவர் சின்னவர் பாராது மிரட்டுகிறார்கள். ஒரு சமயம் ஊடகத்தில் ஜெயில் அதிகாரியை ஒரு ரவுடி வெட்டுவேன் என்று மிரட்டிச் சவால் விட்டது நினைவிருக்கும். அந்தப் பழைய ரவுடிகளுக்குத் தெரியும் மந்திரிகளில் பலரும் முன் ரவுடிகளே என்றும்.. தமிழர் என்ற பெயரில் இப்போது பல கட்சிகள் வந்து திராவிடத்தையும் திராவிடர் கட்சியையும் மட்டமாகப் பேசிவருகிறார்கள். இந்தத் தமிழர்களும் அவர்களின் முன்னோர்களும் இரண்டுத் திராவிடக் கட்சிகள் ஆரம்பிக்கும் போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அதிலும் சிலது இன்னும் பணத்தை பட்டுவாடா செய்யும் பெரியாரை மட்டும் ஆதரிக்கிறது.

பணத்திற்காக மானத்தையும் விற்பார் சிலர். அவரில் இவர்களும் ஒருவகை. சினிமாவில் இருப்பவர்கள் யார், அது யாராக இருந்தாலும், பெரியார் பாஷையில் அவர்கள் கூத்தாடிகளே. கூத்தாடிகள் - கூலி வாங்கி நடிப்பவர்களே!!! ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு, மக்களிங்கே கூத்தாடிகளை மன்னராக்கிப் பார்த்தார்கள். அந்த ருசியில் கூத்தாடிக் கும்பல்ஆட்களை ஏவிக் கத்திக் காட்டி மிரட்டுகிறது. எல்லோரும் மன்னராகப் பார்க்கிறார்கள். உண்மையில் இதைக் கண்டு மக்கள் பயப்படுவதில்லை. சமய சந்தர்ப்பம் வரும்போது மக்களே இவர்களையெல்லாம் வேட்டையாடி வெட்டிக் கூறு போடுவார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம். இனி இதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்.

தமிழ்க் கடவுளான முருகப்பெருமான் கேட்டுக் கொண்டதன் பேரில் தமிழை உண்டாக்கி அருளியது மாமுனி அகத்தியரே. அகத்தியர் வெள்ளாள வகுப்பைச் சேர்ந்தவராம் (அகத்தியர் மற்றும் சட்டைமுனி வாகடங்களில் அவர்களேக் குறிப்பிட்டுள்ளார்கள்) சித்தர்கள் அவரவர்களின் ஜாதியைச் சொல்லிக் கொள்வதில் வெட்கமோக் கூச்சமோப் பட்டதில்லையாம். ஏனெனில் அது அப்போதைய பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம், ஜாதியைச் சார்ந்தே இருந்தது. மேலும் அப்போதெல்லாம் ஜாதியைத் தவறாது வெளிப்படுத்தி அறிவித்துக் கொள்வார்கள். உதாரணத்திற்கு 800 வருடத்திற்கு முன் கம்பனை ஆதரித்தவர் சடையப்ப முதலியாம். ஜாதி என்றதும் நினைவுக்கு வருவது இதோ...

பைபிளில் கர்த்தர் திரும்பத் திரும்பச் சொல்கிறார். கர்த்தரின் ஜாதியினர் இஸ்ரவேலர்களாம். மற்றவரைப் புற ஜாதியினர் என்றும் பைபிளில் அடிக்கடி சொல்கிறார். என்னுடைய ஜனமான இஸ்ரவேலர்கள் வேறு மதத்திற்கு போனார்கள், தோப்பு விக்ரகங்களையும், பாகால் தெய்வங்களையும் வணங்கினார்கள் என்றெல்லாம் அலுத்துக் கொள்கிறார். கர்த்தரே இஸ்ரவேலரை எகிப்திலிருந்து காப்பாற்றியது போன்று செய்த உதவிகளையும் இஸ்ரவேலர்கள் மறந்தார்கள் என்று பக்கத்துக்குப் பக்கம் துயரப்படுகிறார். மேலும் லட்சக்கணக்கான இஸ்ரவேலர்களிடம் மிருகங்களை அனுப்பி அவர்களைத் துன்புறுத்துகிறார். கொள்ளை நோயைக் கொடுக்கிறார். முற்றுகையில் பட்டினிப் போட்டுச் சாகடிக்கிறார். வியாதி, பட்டயக் கருக்கால் சாவு என்று விதவிதமான துன்புறுத்தல் செய்கிறார். பல பல பட்டணங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களைக் கொன்று போடுகிறார். அதற்கு ஒரேக் காரணம் இஸ்ரவேலர்கள் கர்த்தரின் மதத்தை விட்டு வேறு மதத்தையும் வேறு தெய்வங்களையும் வணங்கினார்கள் என்பதற்குத்தான்.

அன்று கர்த்தரால் ஆதரிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களோ பைபிளின் கடைசி அத்யாயம் வரை கர்த்தரை மறந்தார்கள் என்றுசொல்வதும் அவர்களை துன்புறுத்தலும் என்றுத் தொடர்ந்து கொண்டே செல்கிறது. இஸ்ரவேலரின் பெரிய ராஜாக்களான தாவீது, சாலமோன் அவர்களுடைய மக்கள் உட்பட அவர்களுடைய தேவனான கர்த்தரை மறந்து தோப்பு விக்கிரங்களை வணங்கினார்கள். ஆனால் சில இந்தியர்கள் உண்மையான இந்துக்கடவுளரை மறந்துச் அவர்களின் உள்நோக்கத் திற்காக மதம் மாறினார்களே ஏன்? மனிதனுக்கு தற்சமயம் அந்தஸ்தை எது கொடுகிறதோ அதுவேக் கடவுளாம். இல்லை யென்றால் மதம் மாறல் என்பது வழக்கமாகிப்போனது. கட்சி மாறுதல் போல சிலர் மதம் மாறுகிறார்கள்.

தமிழ் நாட்டிலோ இந்தியாவிலோ புத்தமதம் மாறியவர்களுக்கும் ஜைனமதம், வைணவ மதம், சீக்கிய மதம், முஸ்லீம் மதம், கிருத்தவம் போன்ற மதங்களுக்கு மாறிய முன் இந்துக்களை அந்த சிவ பெருமான் தண்டித்ததே இல்லை. அன்பேக் கடவுள், அன்பே சிவம் என்பதே இங்குக் கொள்கையாம். மேலும் மக்கள் புத்த மதம் தழுவினார்கள் காரணம் பேரரசர்களான அசோகனும், அவன் வாரிசுகளும் புத்தம் தழுவ மக்களும் அவ்வழிச் சென்றார்கள். பின் இரண்டாம் நூற்றாண்டில் வந்த கனிஷ்கன், மற்றும் அவன் வாரிசால் அதுத் தொடர்ந்ததாம்.

பின் அகத்தியரின் தலையீட்டால் மொத்த புத்தமதமும் சைனாவுக்குக் குடிப் பெயர்ந்ததாம். ("அகத்தியர் ஞானகாவியம் 1500"-ல் பார்க்கலாம்) குரு கோவிந்தால் சீக்கிய மதம் வந்தது. பின்னே மாலிக்காபூர் என்ற அடிமை வம்ச அலியின் படை எடுப்பால் தென்திசை வரை முஸ்லீம் மதம் வாள் முனையில் பரவியது. இதைப்பற்றி எந்த மேதையும் பேசுவதில்லை. பின்னே வியாபாரம் செய்ய வந்த வெள்ளையனால் நாடும் பறிபோய் கிறித்தவமும் பரவியது. இப்படி இந்தியாவின் இந்தணிந்த சிவன் மதம் தேய்ந்துத், தேய்ந்து மூன்றாம் பிறையானது

இப்போதிருக்கும் தமிழ் மக்களுக்கு அகத்தியன், கொங்கணவன், கோரக்கன், சட்டைமுனி, திருமூலர், இடைக்காடர், கருவூரார், புலத்தியர், புலிப்பாணி, சுந்தரர், தன்வந்தரி, அகத்தியரால் பலமுறை கொன்ற பிறகும் உயிரான அகத்தியரின் சீடன் தேரையர், மச்சர், ரோமர், போகர் ஆக 18-பெரும் சித்தர்களை இங்குக் கடவுளுக்கு அடுத்துச் சொல்லப்படுகிறார்கள். இவர்கள் விஞ்ஞானத்தை 25-பிரிவாகப் பிரித்து மக்களுக்கு போதித்துள்ளார்கள். இவர்கள் சொல்லாத விஞ்ஞானம் எதுவுமில்லை எனலாம். ஆகாயத்தை ஒளிப்பாழ், வெளி ஒளிப்பாழ், வெளிப்பாழ், ஏகம் என்று நான்குப் பிரிவாகப் அகத்தியர் காலத்திலேயேப் பிரிக்கப் பட்டிருந்தது. அதில்தான் வானத்தில் கோள் கிரகங்கள் எந்தத் தத்துவத்தில், கணக்கில் மிதக்கிறது, சுற்றுகிறது, தூரம், காலம், வேகம் முதலியவைகளை கணக்கிட்டிருக்கிறார்கள். 25-பிரிவில் காலம் என்ற பிரிவில் வரும் ஒரு சிறு பிரிவுதான் வைத்தியம். ஆனால் சாகா மூலியான கற்பம், தங்கம் செய்முறையும் பெரியத் தனித்தனிப் பகுதியாகக் காணக் கிடைக்கிறது.

இந்துக்களில் இவ்வளவு பேர் மதம் மாறியும் இந்துக் கடவுள்கள் யாரையும் தண்டித்தது கிடையாது. மேலும் ஒரு பெருமூச்சு கூட விட்டதில்லை, ஒப்பாரி வைக்கவில்லை, பொறாமைப் படவில்லை, செய்த உதவிகளைச் சொல்லிக் காட்டவில்லை. யாரையும் துன்புறுத்தவோ, கொன்று போடவோ இல்லை.

முன்பு காந்தாரம் என்ற சகுனியின் நாட்டில் சிவனைத்தான் வணங்கினார்கள். பல ஆண்டுகள் கழித்து புத்தன் வர அசோகன் அம்மதத்தை காந்தாரத்தில் பின்பற்றச் செய்தான். பின்பு கனிஷ்கன் இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கந்தாரத்தைத் தலைநகராகக் கொண்டு புத்த மத்தை நன்கு பரவச் செய்தான். சுமார் 3௦௦-அடி உயர புத்தரின் முழு உருவங்களைப் பாறைகளின் மேல் செதுக்கினான். அதை சுமார் 25-ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானியர் துப்பாக்கியால் துளைத்துச் சேதப்படுத்தியும், வெடி வைத்தும் அழித்தனர். சரித்திரத்தின் அடையாளங்களைக் காட்டப் பிடிக்காத, காண பிடிக்காத வெறி பிடித்த மூடர்கள் சரித்திரங்களை இப்படித்தான் அழித்து மறைத்தார்கள். இப்போதைய ஆப்கானிஸ்தானம் முன்பு பாரதத்தின் ஓர்அங்கமே, அதை "காந்தாரம்" என்பர்.

ஆண்டிகளால் எப்போதும் மதம் பரவுவதில்லை. பிச்சைக்காரர்கள் மற்றவர் யாரையும் மதம் மாற்ற முடியாது. வெள்ளையன் இந்தியாவை ஆண்டதால்தான் இங்கு கிருத்தவம் வந்தது. பலவீனர்களை வளைத்துப் போட்டான். ஆனால் இந்தியாவில் பிறந்து, இந்துவாக இருந்து ஏதோ ஒரு காரணத்திற்காக கிருத்துவராக மாறியவர் இந்துக் கடவுள்களைச் சாத்தான் என்றார். இந்த அரியக் கண்டுப் பிடிப்பிற்கு அந்த அறிவாளிக்கு மண்ணால் செய்த நோபல் பதக்கம்தான் கொடுக்கவேண்டும். தன் பழையத் தமிழ் தெய்வ நம்பிக்கையை ஏனோ மறந்து கிருத்துவனானவர், கூசாமல் தைரியமாய் தமிழ் தெய்வத்தைச் "சாத்தான்" என்று சொல்கிறார்.
மதம் மாறியதற்கு பைபிளில் கர்த்தன் தண்டனைகள் கொடுத்தது போல இந்துக் கடவுள்கள் தண்டனைகள் கொடுக்காததால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். பூனை இளைத்தால் எலி பூனையைக் குடும்பம் பண்ண கூப்பிடுமாம். அவ்வளவு பயமில்லாது போனது. அரசாங்கம் கவனிக்காது ஏனோ தானோ வென்றிருக்கவே இப்படி அவர்கள் பேசுகிறார்கள். கதை இப்படியேப் போனால் கடைசியில் அவர்களை இந்து மக்களே ஒருப்பார்கள் என்பதில் ஐயம் வேண்டாம். அரசியல் வாதிகள் எல்லாம் ஜாதி இல்லாதவர்க்கும் மதம் இல்லாதவர்க்குமா பிறந்தார்கள் ? அதனால்தான் எதையும் காதில் வாங்கமாட்டேன் என்கிறார்களா ?

ஆனால் தங்கள் வீட்டில் மட்டும் ஏதாவது இழவு விழுந்தால் ஜாதியையும் மதத்தையும் குறிப்பிட்டு ஒப்பாரி வைப்பார்கள். காலம்தான் இவர்களுக்கு பதில் சொல்லும். இந்த ஆண்மையில்லா அரசியல்வாதிகளின் கையாலாகாத் தனத்தால் உண்மைத் தமிழன் துவண்டு போயுள்ளான்! அவரின் பக்திக் கேள்விக்குறியாக மாறியுள்ளது....!

அகத்தியரை "குடமுனி" என்றும், "குருமுனி" என்றும் சித்தர்களின் குருமுனி என்றும் வழங்கப்பட்டார். பிறகு பல காலம் கழித்து வந்தத் தொல்காப்பியன் தமிழின் இலக்கணம் சொன்னான். இதனையும் நாம் அறிந்ததே. தமிழில் பிற மொழிகளில் இல்லாத தனிச் சிறப்பு எதுவெனில் தமிழின் வினைச் சொற்களே. வினை எச்சம், வினை முற்று, வினைத்தொடர் - இதிலேயே எதிர்மறை என்று நீண்டுகொண்டே போகிறது. வினையில் ஒரே சொல்லில் எழுத்தில் பலமாற்றங்கள் அடைய வல்லது. ஆகவே அயலாரோ வேற்று மொழியானோ நம் தமிழை அவ்வளவு எளிதில் கற்றுக்கொள்ள முடியாது. ஆனாலும் தமிழன் வேற்று மொழியை எளிதில் கற்றுக்கொள்வான். தமிழில் இன்னும் பல சிறப்புகளுண்டு, அதைப் பலரும் அறிவர். அதை அவர்களே பல இதழ்களிலும் நாளேடுகளிலும் படித்திருக் கிறார்கள், தெரிந்தவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

தமிழில் தமிழனைவிட சிறந்த இலக்கணமோ, பொது விதிகளையோ எந்தக் கொம்பனாலும் எழுதிவிட முடியாது. எவனோ சினிமாவை டைரக்ட் செய்ய மற்றொருவன் தனது பெயரை போட்டுக் கொள்வதும், எவனோ கதை எழுத மற்றொருவன் எழுதினான் என்று விளம்பரம் செய்வதும் இப்போது மட்டுமல்ல அந்தக் காலத்திலேயே நடந்தேறியுள்ளது. சிவனார் எழுதித் தந்த "கொங்குதேர் வாழ்க்கை" பாடலை தருமி எடுத்துச் சென்று காட்டிப் பரிசு வாங்கியது போலதான்.

வெள்ளையன் தமிழைப் படித்தான், தமிழனைவிட சிறந்த இலக்கண நூல்களைப் படைத்தான் என்பதெல்லாம் அண்டப் புளுகாகும். அந்த வெள்ளையன் எதோ ஒரு ஏழைத் தமிழறிஞனை விலைக்கு வாங்கி விட்டான் என்றுதான் அர்த்தம். அந்த அறிஞரிடம் படித்ததற்கு ஒரு சம்பளமும் இலக்கணப் புத்தகம் எழுதியதற்கு ஒரு கூலியும் வெள்ளையன் தந்திருக்க வேண்டும் என்பதே எம் கணிப்பு. வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவிற்கு நம் தமிழ்மொழியின் வினைச் சொற்களுக்குச் சிறப்புண்டு. அத்தனையும் வேற்று மொழியினர் கற்றுக் கொண்டுத் தேற முடியாது. அதிலும் இலக்கணப் புத்தகம் தமிழில் எழுதினான் என்பது ஒத்துக்கொள்ள முடியாத விஷயம்.

ஏனெனில் தொல்காப்பியத்திலே வினைச்சொல்லைப் பயன்படுத்தும் விதம் விளக்கப்பட்டுள்ளது. அதற்காக மொத்த வினைச் சொல்லையும் தொகுத்து நூலாக எழுதுதல் தமிழருக்குத் தேவையற்ற வேலை. பிறப்பால் தமிழனாயின் அவனுக்கு அதுத் தேவை இல்லை. அது பாராட்டிற்குரிய பணியும் ஆகாது.இதை சிலர் இப்போது வேலையில்லாமல் தொகுத்து வழங்குகிறார்கள். அவர்கள் முடிந்தால் தமிழில் முழு அகராதியையும் ஒரு வார்த்தையும் விடாமல் எழுதி அதை கம்ப்யூட்டரிலே ஏற்றச் சொல்லுங்கள் பார்ப்போம். பாதிக்கு மேலான வார்த்தைகளை இந்தக் கம்ப்யூட்டர்கள் ஏற்றுக்கொள்ளாது என்பதே உண்மையாகும். காரணம் மொழிவளம் அவ்வளவு அளவிடமுடியாததாக தமிழ் இருக்கிறது.

ஆங்கிலத்தில் come, comes, came என்ற வார்த்தைகளும், come என்ற வார்த்தையுடன்; do, does, did அல்லது have, had இணைத்தும் உபயோகித்தாலே போதும். Come அல்லது came என்று மட்டுமே எல்லாவற்றிற்கும் எளிதாக உபயோகப்பார்கள். அப்படித்தான் அவர்கள் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் தமிழனோ இவைகளைத் தானாகவே இயற்கையாகவே சுமார் 100-க்கும் மேற்பட்ட தனித்தனிச் சொல்லாகச் சொல்லுவான். சொல் என்றும் வார்த்தை என்றும் பேசவும் எழுதவும் செய்வான்.

எதிர் மறைக்கு do not, does not, did not -டுடன் come போட்டு எழுத அதுவே ஆங்கிலம். ஆனால் தமிழில் வார்த்தைக்கு வார்த்தை எழுத்துடன் பெயார்த்தெடுத்துஅது மாறுபடும். ஆகவே தான் தமிழிற்கு தமிழனல்லாது பிற நாட்டவன் இலக்கணம் எழுத முடியாது.

இப்படித் தமிழ் அறியாததாலும், தெரியாததாலுந்தான் வட மாநில தென் மாநிலக், கன்னட, தெலுங்கு, மலையாளம் பேசுவோர் தமிழ் பேசுவதில் தடுமாறுகிறார்கள். தற்போது கூட கேரளத்தைச் சேர்ந்த நம் அண்டை மாநிலத்தார்கள் பல வருடங்களாகத் தமிழ்நாட்டில் குடி இருந்து தமிழருடன் பழகினாலும் நாய் வரான், நாய் சாப்பிடறார், நாய் தூங்குறார், நாய் இருக்கிறார் என்று மரியாதைச் சேர்த்தும் எஜமானைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே எஜமான் இருக்கிறான், இருக்கிறது என்றும், ரயில் வர்றான் என்றும் தவறாக தங்களை அறியாமலேச் சொல்கிறார்கள்.

பக்கத்தில் இருப்பவனுக்கே பலவருடம் பழகியும் தமிழில் சரியாகப் பேச வராது, புரிந்துகொள்ளவும் முடியாது. தமிழ் நாட்டிலே பிறந்தாலும் மற்ற மொழி பேசுவோர் அவன் வீட்டில் அவன் மொழியையேப் பேசுபவன் என்றால் தமிழ் உச்சரிப்புகள் சரியாக வராது. கடைசிவரை புரிந்து கொள்ள மாட்டான். அவன் 40% மார்க்குக்குத்தான் தகுதி என்பது நாம் கண்ட உண்மை. குழப்பமாகவேப் பேசுவார்கள். தமிழைப் புரிந்து கொண்டு இலக்கணமாகப் பேசுவது என்பது அன்னியர்க்கு கட்டாயம் முடியாத ஒன்றாகும். அதுவும் வெள்ளையர்களுக்குச் சுட்டுப் போட்டாலும் நாக்கும் புரளாது, புரிந்து கொள்ளவும் முடியாது. அதற்குதான் ஒரு ஐயரை எப்போதும் அவன் பக்கத்தில் வைத்திருப்பது வழக்கம். நம் பேச்சையேக் கேட்டிராத வெள்ளையன் வினைச்சொல்லுக்கு இலக்கணம் எழுதினான் என்பது கேப்பையில் நெய் வழிகிறதுக்கு என்பதற்கு ஒப்பாம். அவர்களுக்குச் சிலையும் வைத்து மகிழ்வான் நம் தமிழன்.

தமிழன் எதைச் சொன்னாலும் நம்புவான் எவரோ சினிமாவில் சாக்ரடீசும், ஒத்தெல்லோவையும் எழுத எவரோப் பெயர் பெற்றதும் இப்படித்தான். தமிழனின் நிலைப்பாட்டைப் படிக்காத ஒன்றும் அறியாத் தமிழர்களைக் கிண்டல் அடிக்கவிட்டு ரசிப்பவர்களும், அதில் மாட்டிக்கொண்டு முழிக்கும் தமிழர்களும் அறிவீலிகள். அவர்கள் தமிழர்களே இல்லை. உண்மையில் இன்று தமிழனின் நிலை என்ன? எவன் எதைச் சொன்னாலும் கைதட்டி வரவேற்பான். அப்படி வரவேற்கும் தமிழன் அப்படிச் சொன்னவனின் கட்சியைச் சார்ந்திருந்தாலோ அல்லது அவரைப் பிடித்திருந்தாலோ உண்மைகளை அறியமுற்படாது அவனுக்கு பரிந்து பேசி மல்லாந்து உமிழ்ந்து கொள்வான். இதுதான் இன்றையத் தமிழர்களின் நிலை.

மொழியும் மதமும் மக்களின் இருகண்கள் என்றால் தன்னுடைய நாட்டை உயிர் மூச்சாகக் கருதினான் பச்சைத் தமிழன். வெள்ளையனின் கடைசிக் காலத்திலே தமிழ் நாட்டிலே நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் இல்லாத ஒருப் பெருங் கும்பல் இருக்கத்தான் செய்ததது. தமிழ் நாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி. மக்கள் முன்பு சைவ அல்லது வைணவ கடவுள்களைத்தான் வணங்கி வந்தார்கள். அப்படித் தொழுதவர்களில் மேலே சொன்னப் பெருங்கும்பலுக்கு என்ன ஈர்ப்போ - அவர்கள் பிற மதம் தழுவ ஆலாய்ப் பறந்து போனார்கள். இங்கிருக்கும் பிற மதத்தார் யாரும் இங்கிலாந்தில் இருந்தோ, பிரான்சிலிருந்தோ அராபிய தேசத்திலிருந்தோ வந்து குடியேறியவரில்லை.

அவர்கள் அனைவரும் முன்பு நம்முடைய முன் சொந்தங்கள்தான். முன் இந்துக்கள் தான். ஆனால் அப்படி மதம் மாறியவர்களின் மூளையிலிருந்து நம்முடைய கடவுள்களை அவர்கள் ஏன் வழித்து எடுத்து வீசிவிட்டார்கள் என்று நமக்குத் தெரியும். அதை வெளிப்படையாக இங்குச் சொல்ல இயலவில்லை.

கிருத்துவர்களுக்குப் பள்ளிகள் கல்லூரிகள் ஆரம்பிக்க வெள்ளையர் ஊக்குவித்ததின் பலன் என்ன? அவர்கள் பள்ளியில் படிக்கும் நம் குழந்தைகளுக்கு தமிழர் கடவுள்கள் "சாத்தான்" என்று சொல்லி சொல்லி நஞ்சை ஊட்டி நம் கடவுள் பக்தியை ஒழித்தார்கள். இப்போது குழந்தைகள், பெரியவர், சிறியவர் இடையே இருந்த உறவு சீர்கெட்டுப் போனது. நம் வாரிசுகளை நீதி - நெறி கெட்டலைய விட்டார்கள். கிருத்துவர்களின் துன்புறுத்துதலால் பெண் குழந்தைகள் நெற்றியில் பொட்டு வைப்பதைக் கைவிட்டார்கள். திராவிடக் கழகத் துன்புறுத்துதலால் ஆண்கள் நெற்றியில் விபூதி இட மறந்தார்கள். நம் சாமிகளைக் கிண்டலடித்தால் கொதித்து எழாமல் சிரித்தார்கள். இப்படி அடிமடியில் கைவைத்தது நம் பக்தியை ஒழித்தவர்கள் மதம் மாறிகளான கிருத்துவ மிஷனரிப் பள்ளிகளும், கல்லூரிகளும்தான்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் குழந்தைகளுக்குத் தகுந்த நீதி, நேர்மை, இறக்கம், பக்திக் கதைகளை சிவன், திருமால், கிருஷ்ணன், ராமன் போன்ற அவதாரப் புருஷர்களை இணைத்து நீதிக்கதைகளைப் போதித்துக் கஷ்டப்பட்டு வளர்த்தார்கள். குழந்தைகள் வளரும் போதே கடவுள் பக்தியுடன் வளர்ந்தது. குட்டிச் சாத்தான்களின் மதம் நம்நாட்டில் நுழைந்ததும் அல்லாமல் நாட்டையேக் கபளீகரம் செய்யப் பார்க்கிறது. இப்படிப் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை ஊட்டுபவனுக்கு பாதிரி உடையேன்? தாடிவேஷம் எதற்கு? அந்தப் பாதிரிப் பேச்சு நாட்டில் புரட்சியைத் தூண்டுவதற்குச் சமம். நாடு எக்கேடு கேட்டாலென்ன என்று இன்னுமா நினைக்கிறது இந்த மாநில அரசும் மத்திய அரசும்? பத்திரிகைக்காரர் கூடவா இவைகளை ஆதரிக்கிறார்? நாட்டின் உளவுத்துறை எதைக் கண்காணிக்கிறது.....?

முகநூல்களையும் யூ-ட்யூப்-களையும் உடனடியாக சென்சார் செய்து குற்றவாளிகள் எவனாக இருப்பினும் கைது செய்து நாட்டைக் காப்பது அரசின் கடமை அல்லவா? ஒரு பாதிரியே ரவுடிபோல பேசினால் அந்த மதத்தினரால் பிறமதத்தின் மக்களுக்கு என்னென்ன பயமுறுத்தல்கள் நடந்துகொண்டிருக்கும் என்பதை மக்களே சிந்தியுங்கள்.

மதம் மாறிகள் தீட்டிய மரத்திலேக் கூர் பார்க்க விரும்புகிறார்கள். காரணம் தமிழன் எதையும் ஆழ்ந்து படிக்காது கதா காலட்சேபம் கேட்டுத் திருப்தி யடைந்தவன். அவன் சொன்னதைச் சோதிக் கறியான் எனத் தெரிந்து வைத்திருந்தார்கள். முஸ்லிம் மதத்தின் வேதம் குரான் ஒன்றே என்றறிவோம். கிருத்துவர்க்கு பைபிள் ஒன்றே வேதம். ஆனால் தமிழர்களோ அறுவகை சமயமும் போற்றுபவர்கள். வைணவத்தையும் உடன் தொழும் பக்தியாளர்கள். இங்கேயே பலவாறான தெய்வ வணக்கங்கள் இருக்க பிறமதம் தழுவ இந்துக்களில் பலரும் ஓடியதேன்?

அவர்கள் நெல் மணிகளில்லை, பக்தியெனும் பால் பிடிக்கா நெல்பதர்கள். இந்திய நாட்டிற்கும் தமிழ் நாட்டிக்கும் உதவா வீணர்கள். அவர்கள் இவ்வளவு நாள் நாட்டிற்கும் தமிழருக்கும் கபடமாக நடித்து இருந்து வந்துள்ளார்கள். அரசின் தயவில் சலுகையில் படித்து முதலில் வேலை பெற்று நல்ல அந்தஸ்தையும் வசதியும் பெற்ற பிறகு, மக்கள் மத்தியில் தங்களை முன்னிலை படுத்திக்கொண்ட பிறகும், இவர்கள் திருப்தி அடைய முடியவில்லை. ஆங்கிலேயனைத் துரத்தியப்பிறகும் அவன் மதம் இங்கு பல ஆள்காட்டிகளால் வளர்கிறது. கிருத்துவர் ஒருநாளும் நாட்டைப் பற்றிக் கவலை படமாட்டார். நாட்டுப்பற்று என்பது 1% கூடக் கிடையாது. அதே போல் தமிழ்நாட்டையும் தமிழர் பக்தியையும் மதிக்க மாட்டார்கள். தாங்கள் இந்தியாவிலே வாழ்வதாகவே அவர்கள் எண்ணுவதில்லை.

இசரவேல், சமேரியா, ஜெருசேலம், காணான் தேசம், எகிப்து, பெயேர்செபா, எபிரெயர், அர்மீனியர், பெலிஸ்தியர், காபூல், தமஸ்கு என்பவை பைபிளில் குறிப்பிட்டிருக்கும் நாடுகள். இப்படிப் பட்ட பெயர்களை தினமும் வாசிப்பதே இவர்களது வேதம் என்று நினைக்கிறார்கள். அங்கு தான் இவர்கள் பிறந்து வளர்ந்ததாகக் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். அங்குதான் அவர்கள் உறவுகள் இருப்பதாக நினைக்கிறார்கள். இவர்களின் மனம் இந்தியாவைப் பற்றியோ இந்தியர்களைப் பற்றியோ சிந்திப்பதில்லை. பொதுவாய் ஐரோப்பியர்கள் என்ற நினைப்பில் வாழ்கிறார்கள்.

பிற மதம் மாறியவர்களில் குறிப்பாக கிருத்துவர்கள், ஏனோ தங்கள் முன் மதமான இந்து மதத்தைத் தொடர்ந்துத் தாக்கிக் கேவலப் படுத்துகிறார். இவர்கள் தேடிக்கொண்ட புதைகுழியில் மற்ற இந்துக்களையும் இழுத்து உறவாக்கிக் கொள்ளப் பார்கிறார்கள் என்பதே உண்மை. இவர்களுக்கிருப்பது ஒரு வேதம். அதையே இவர்கள் சரியாக படிக்காது கிருத்துவ மதத்திலேச் சேர்ந்தார்கள் என்பதே உண்மை. அதில் பாண்டியத்யமும் பெறமுடியாத போது பல பல இலக்கியங்கள் உள்ளடக்கிய நம் இந்து மதத்தின் புத்தகங்களை சரியாய் படிக்காது சபையில் இந்துக்களைக் கிண்டல் அடிக்கிறார்கள். பன்றியோடு கன்றையும் பிடித்து அடைக்க நினைக்கிறார்கள்.

தெருத்தெருவாய் அலைந்து கன்றுகளை வலை வீசி பிடிக்கப் பையை மாட்டிக்கொண்டு கீழ்த்தரமாக ஊர் ஊராய், தெருத் தெருவாய் அலைகிறார்கள். இந்துக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இவர்களைக் கட்டிப்போட்டு அடையாளம் காட்டவேண்டும். இந்தியாவிலிருந்து இந்துக்களின் அடையாளைச் சுவடுகளை அழிக்க இந்த மதமாறியக் கிருத்துவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு ஊரூராய்த் திரிகிறார்கள்.

வெள்ளையன் என்பவன் திராவிடன், ஆரியன் என்ற ஊகத்தின் சரித்திரம் எழுதி படிப்பவர் மனதில் நஞ்சு சேர்த்தான். தமிழ் மற்றும் மற்ற அனைத்து இந்திய மொழி ஆராய்ச்சி என்று உள்ளேப் புகுந்த வெள்ளையன்அந்தந்த மொழியின் அறிஞர்களை விலைக்கு வாங்கி அந்தந்த மொழிகளில் பைபிளை எழுதி மதம் மாறுபவர் கையில் ஒவ்வொரு பைபிளைக் கொடுத்தான். மொழி ஆராய்ச்சியென்று வெள்ளையர்கள் அந்தந்த மொழி அறிஞர்களை அணுகி தட்சணைகள் கொடுத்து தமிழ் பற்றிய நல்ல புத்தகங்களை அவர்கள் மூலம் தயாரித்து அப்புத்தகங்களைத் தாங்கள் தயாரித்ததாக நல்ல விளம்பரப்படுத்தி தங்கள், பெயரைப் போட்டுக் கொண்டார்கள்.

காஷ்மீர் கல்ஹனர் காஷ்மீரின் வம்சாவளி அரசர்களின் பட்டியலைத் தொகுத்தப் புத்தகம் தான் "ராஜத் தரங்கனி". இப்படி பல இந்திய மன்னர்களும் தங்கள் வம்சங்களின் சரித்திரத்தை ஆள் வைத்து எழுதி இருந்தார்கள். ஆனால் அந்நியர்களின் படை எடுப்பின்போது அந்நியர்கள் முதலில் அழித்தது இவை போன்ற சரித்திரங்களைத்தான். பின்பு அறிஞர்களின் ஓலைச் சுவடிகள், புதிய கண்டுபிடிப்புகள், விஞ்ஞானம், விவாதக் கூடங்கள், பள்ளிகள், நூலகங்கள், அரண்மனை, வீடுகள், குடிசைகள் போன்றவைகளை எரித்தார்கள். கஜானாக் கொள்ளை, வீட்டுக் கொள்ளைகளையும் முதலில் நடத்தினார்கள்.

கால்நடைக் கவர்தல், பெண்களையும் ஆட்களையும் கவர்தலும் நடந்தது. ஆகையால் தமிழரின் எல்லா சரித்திரங்களும் அழிந்து போயின. ஆகவேதான் கோவில் போன்ற பல பல இடங்களில் கிடைத்த கல் வெட்டுக்களை மட்டும் வைத்து தமிழர்கள் பற்றியச் சொற்ப சரித்திரங்களை மட்டுமேச் சொன்னார்கள்.

முதலாம் கரிகாலச்சோழன் வரலாறு கூட அனுமானம்தான். முற்றிலும் கிடைக்கவில்லை, அவையெல்லாம் பேசிப் பயனில்லை அது நமக்குத் தேவையும் இல்லை. இலக்கியங்கள் என்னச் சொல்கிறது. அதைமட்டும் படிப்போம், மகிழ்வோம். அதன் காலம், அந்த சமயத்தில் யார் ஆண்டது என்று ஆராயும் போதுதான் ஒருவருக்கொருவர் கருத்துக்கள் மாறுபடுகிறது. இது நமக்குத் தேவை இல்லை. புலவர்களின் கருத்துக்களை படித்து அறிவாளிகளாவதே நம் கடமை. அதைவிட்டுக் எழுதியக் காலம் பற்றிப் பேசி பெருமையடித்துக் கொள்கிறானே ஏன்?

சிவனைத் திருமூலர் "இந்தின் இளம்பிறையோனே" என்று பாடியிருப்பது கழகத்தாருக்கு எப்படித் தெரியும். ஆனால் கழகத்தாரோ வெள்ளையன்தான் "இந்து" என்று பெயர் வைத்தான், முன்னே இந்துக்கள் கிடையாதென்கிறார். அப்பாவித் திராவிடர்கள். அவர்கள்தான் உண்மைத் தமிழர்கள் இல்லையே!!! "இந்து" என்ற வார்த்தையை சாக்காக வைத்துக் கொண்டு அவர்கள் தமிழர்களையே அழித்தார்கள். சைவ, வைணவத்தை வளரவிடாது கெடுத்தழித்தார்கள். அதே சமயம் வெள்ளையன் தன் கண்டுபிடிப்பான திராவிடத்தைச் சொல்ல அது நாங்கள்தான் என்று மார்தட்டிக்கொண்டு முன்னே சென்று வலிய ஏற்றுக் கொண்டு தாங்கள் ஏமாந்தது மட்டுமின்றி எல்லாத் தமிழரையும் ஏமாற்றி வருகிறார்கள்.

எதற்கெடுத்தாலும் கும்பல் கூடிச் சேர்ந்து கொண்டு சரக்கில்லாமல் ஒரே மேடையில் பேசத் தயாரா? என்று சவால் விடுவது, மற்றும் சவடால் அடிப்பதே கும்பல் கழகக் கண்மணிகளின் வேலை. உலகிலே இல்லாத ஒரு திராவிடத்தை எழுபதாண்டாய் ஆதரித்து அதிலிருந்து மீள முடியாமல் முழிக்கும் கும்பலாய்ப் போனது இந்த வீரத் தமிழ்நாடு. கழகக் கண்மணி கிருத்துவர்களுக்கு கிருஸ்த்மஸ் வாழ்த்து சொல்வான், முஸ்லீம்களுடன் ரம்ஜான் நோன்புக் கஞ்சியைக் குல்லாப் போட்டுக் கொண்டுக் குடிப்பான். ஆனால் தமிழர் கோவில்களையும் கடவுளர்களையும் கிண்டலடிப்பான். உண்மைத் தமிழருக்குப் பிறந்தவரா இந்தக் கழகத்தினர்? சந்தேகம் வலுக்கிறது. இவர்களுக்கு அவர்களுடையப் பெற்றோர் தமிழ் கடவுள் பெயரைத்தானே வைத்து அன்பாய்க் கூப்பிட்டார்கள். ஆனால் பெற்றோருக்கு அடங்காத ஓடுகாலிகள் தங்கள் பெயர்களையும் மாற்றிக் கொண்டு ஏதோ புரட்சியாளர்களைப் போல உலாவுகிறார்கள். தமிழர்களின் பக்தியை அழித்தக் கூட்டம்.

திராவிடம் என்று சொன்ன வெள்ளையர்கள் தங்கள் ஊகங்களை அப்போதைய ஊடகமான அன்றையப் புத்தகங்களில் வெளியிட்டார்கள். அலெக்சாந்தர், V.A.ஸ்மித், மேக்ஸ் முல்லர் எனும் அந்த அமெரிக்க இங்கிலாந்து ஆராய்ச்சி யாளர்களும் இன்னும் பலரின் ஊகங்களின்படி எழுதப்பட்ட புத்தகங்களைப் படித்த இருபதாம் நூற்றாண்டின் மேதைகள் அண்ணாத்துரை, இலங்கை சுந்தரம் பிள்ளை, மற்றும் பலப் பல பார்பன ஐயர்கள், ஐயங்கார்கள், பேராசிரியர்கள் எல்லாம் மேலே சொன்ன திராவிடத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலிடாது மாறாக வெள்ளையன் எழுதியதை அவர்கள் படித்து ஏமாந்து அதன் அடிப்படையில் சிந்துவெளித் திராவிடன் தமிழ்நாட்டில் குடியேறினான் என்றார்கள்.

அப்படியானால் ஒரிஜினல் தமிழ் நாட்டுக்காரன் எங்கு ஓடிப்போனான்? அவன் யார்? வந்தவன் என்ன மொழிப் பேசினான்? ஓடிப்போனவன் என்ன மொழிப் பேசினான். இதற்கெல்லாம் சரியான ஒரு விளக்கம் கொடுக்காது வெள்ளையன் நம்மை ஏமாற்றிப் போட்டான். நன்கு படித்த கழத்தின் கண்மணிகள், மேல் துண்டை அடிக்கடி ஒழுங்கு படுத்திக்கொள்ளும் கண்மணிகள் இதையெல்லாம் ஏன் ஆராயவில்லை, திராவிடன் என்றால் அவன் மொழி என்னவானது? அதுதான் அந்த வாழைப்பழம் என்றக் கதைவிடக் கூடாது. தமிழ் மொழியை திராவிடமெனும் கற்பனைக்கு தாரை வார்க்க நினைக்கும் அயோக்கிய கும்பல். தாங்கள் வாழத் தமிழனைக் கெடுத்தார்கள். பக்தி கலாச்சாரம் அழித்தார்கள்.
வெள்ளையன் ஊகத்தின் பேரில் சொன்னதை வைத்து நூல்கள் பலவும் மாணவர்களுக்காக எழுதித் தள்ளினார்கள். அவர்களுக்கும் ஆராய நேரமில்லை. உரித்த வாழைப் பழமென உண்டார்கள். பாவம் வெள்ளையனின் ஊகத்தைப் படித்த நூலாசிரியர்கள் தங்கள் புத்தகங்களில் மாணவர்களுக்குத் தவறான பாடங்களை சொல்லிக் கொடுத்தார்கள். இந்தியாவெங்கும் தமிழன் திராவிடனானது இப்படித்தான். அந்த காலத்தில் இந்தியாவில் 56 தேசம் என்பார்கள். அதில் தெற்கில் இருந்த ராஜ்ஜியங்கள் மொத்தம் பத்தாம். சேர, சோழ, பாண்டியர், கன்னடர், துளு, மலையாளம், மலபார், கொல்லம், குடகு, கொங்கனி என்று பத்து தேசங்களைப் பெயர் சொல்லி தனித்தனியாகக் குறித்தே சொல்கிறார்கள். ஆகையால் தமிழ்நாடும் கிடையாது திராவிடமும் கிடையாது.

சேர, சோழப், பாண்டியர்கள் தமிழ்மொழிப் பேசினார்கள் என்பதே சொல்லப்படாத ஒன்று. ஆனால் அவர்கள் தமிழ் பேசினார்கள் என்பதற்கு தமிழ் இலக்கியங்களேச் சான்று. விந்தியமலை தொடக்கத்திற்கு பேர்தான் திராவிடம். அதுகூடத் திராவிடம் என்ற வார்த்தை தமிழில் கிடையாது. சமஸ்கிருதத்தில் திராவிடம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். திராவிடம் என்பது விந்திய மலைக்குக் கீழே மராட்டியமும் அதற்குத் தெற்கேயுள்ள பிரதேசமும் திராவிடமென்று சிலர் சொல்கிறார்கள். சமஸ்கிருதத்தில் இந்த கீழ் மராட்டியத்திலிருந்து தெற்கு மொத்தமும் திராவிடம் என்றார்கள். அந்த வார்த்தைப் பத்து தேசத்திற்கு மேல் குறிக்கும் சொல்லாகும் என்கிறார்கள். ஆனால் கண்டிப்பாக தமிழ் மொழியிலோ தமிழ்நாட்டில் உள்ளக் கல்வெட்டுகளிலோ திராவிடம் என்றச் சொல் கிடையாது. தமிழனின் வடஎல்லையை வடவேங்கடம் திருப்பதிதான் என்று தமிழ் இலக்கியம் கூறுகிறது. திருப்பதிகூட ஆந்திராவிற்குக் கொடுத்து விட்ட நிலையில். இவர்களெல்லாம் தமிழ்நாட்டை ஆள்வதேனோ?

பாரதம் என்னும் 56 தேசத்தில் தெற்கே சேர சோழப் பாண்டியரல்லாது, கன்னடம், துளு, மலையாளம், மலபார், கொல்லம், குடகு, கொங்கனி, ஆந்திரம், பல்லவம், தனித்தனி நாடுகளாம். இவற்றைப்போலவே 56 தேசத்தில் திராவிடம் தேசமும் ஒன்றாம். அது ஆந்திராவின் வடக்கும் மகாராஷ்டிராவின் கிழக்குப் பகுதியெனத் தெரிகிறது. 56 தேசத்தையும் வரிசையாய் அக்காலத்தில் சொல்லும்போது இப்படித் தனித்தனித் தேசமாகத்தான் மன்னர்கள் முதல் ஆண்டிகள் வரைச் சொல்லுகிறார்கள். ஆனால் கழகத்தாரின் கண்டுபிடிப்போ திராவிடம் என்பது, தமிழுடன், தெலுங்கு, மலையாளம், துளுவுடன். கன்னடமுமாம். இது உண்மையிலே பெரியக் கேலிக்கூத்தாகும்.

இதையெல்லாம் கழகத்தினர் பாமரர்க்குப் பரப்பினர். சிறுபிள்ளை பருவத்தில் அறியாது படித்த இருபதாம் நூற்றாண்டின் துவக்க மாணவர்கள் கண்மூடியாய் ஒத்துக் கொண்டதை மறு பரிசீலனை செய்யாது ஆராயாது எழுபதாண்டைக் கெடுத்தார்கள். இஃது யார் குற்றம்? அகழ்ந்தவன் குற்றமா ? ஊகித்தவன் குற்றமா ? அதை எழுதியவன் குற்றமா? படித்தவர் குற்றமா? அதை பரப்பிய பாசறைகளின் குற்றமா? யார் குற்றம் ? சொல்லுங்கள்.

என்றைக்கு திராவிடன், திராவிடம் நுழைந்ததோ அன்றே நீதி நெறி, பக்தி, மரியாதை, தயவு, தாட்சண்யம், ஈவு, இரக்கம், அன்பு, பண்பு, ஒழுக்கம், மட்டு மரியாதை, பெற்றோர் பாசம், பெரியோர் வணக்கங்கள் அனைத்தும் காணாப் போனது. 35 வயதுக்காரன் கட்சி தலைவரானால், 5௦ வயதுக்காரன், 35 வயதுக்காரனை கூசாமல் "அண்ணே" என்றழைக்கிறான். மரியாதைத் தேய்ந்து கீழேப் போனது.

இந்த 70 ஆண்டுகளில் பெருமளவில் தமிழர்கள் கடவுள் வழிபாட்டை மறந்து பக்தி இழந்தார்கள். கோயிலிலா ஊரில் குடியிருக்க வேண்டாமென்பதைக் கூட மறந்து புதியப் புதிய பேட்டை நகர் உண்டாக்கி அதற்கு சாமிக் கும்பிடாதவன் பெயர்களை வைத்துக் குடியேறினான். தினம் தினம் கோயிலுக்குப் போகும் பழக்கத்தைக் கைவிட்டான். தங்கள் கவனத்தை தமிழின் பாலிருந்ததையும் ஒழித்துக் சினிமா, டிராமா, காதல், கத்தரிக்காய் என்று மனதை வேறு திசையில் திருப்பிச் சீரழிந்துப் போட்டார்கள். பிறமதத்தை வளரவிட்டு தமிழ் மதங்களை வளர விடாது திராவிடக் கழகத்தார் உன்னிப்பாய் கவனித்து வெட்டினார்கள். தமிழின் பக்திப் பற்றை வேருடன் அறுத்தார்கள். நாட்டுப் பற்றை நாசமாக்கித் தீக்கிரையாக்கினர். தமிழ் பேரரசர்களையும் இந்தியச் சுதந்திரத் தலைவர் களையும் அவமதித்தார்கள். ஏன் பெற்றோரையும் மதிக்காது போனார்கள். குழந்தைக் கல்விமுறை நீதி நெறிகளைக் கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டார்கள்.

தமிழ்ப் பேரரசர்கள் புத்த மடங்களை இடித்துள்ளர்கள் என்று பொய்யான வதந்திகளைப் புதுப்புதுக் காளான்கள் முளைந்து பக்கத்திலிருந்துப் பார்த்தவனைப் போல பேசி கொஞ்சநஞ்ச மிருக்கும் தமிழ்ப் பற்றையும் அழிக்கப் பார்க்கிறது. இந்தப் பணவசதி படைத்தக் கழகம். விழா என்ற பேரில் காலிகளை மேடையேற்றித் தமிழ்ப் பேரசர்களையும், விடுதலைத் தியாகிகளின் புகழையும் அழிக்கப் பிசாசுகள் போலப் வெறியாய் பேசவிடுகிறார்கள். இதெல்லாம் பார்க்கும்போது பெரியாரின் சொத்து நல்லப் பணிகளுக்குச் செலவழிக்க படவில்லை என்றுத் தெரிகிறது. மேடையேறினால் எவரையும் அவர் - கடவுளானாலும் சரி, பேரரசனானாலும் சரி, மேதைகளானாலும் சரி, மடாதிபதியானாலும் சரி, தியாகியானாலும் சரி, பக்தனானாலும் சரி, ஜாதியானாலும் சரி, கோயிலானாலும் சரி, குளமானாலும் சரி - எதையும் திட்டுகிறார். பெரியாரின் சொத்தில் மேடை போட்டுச் செலவழித்துத் திட்டுகிறார். பெரியார் இருந்தால் விடுவாரா?

பேசுபவன் அவனையேத் திட்டிக் கொள்ளும் காலம் கூட வருமோ என்னவோ !! நாட்டின் விடுதலைக்குப் பாடுபடாத அம்பேத்காரரையும் பெரியாரையும் வானளாவப் புகழ்கிறார்கள். காரணம் பெரியார் விட்டுச் சென்றப் பணமும் சொத்தும்தான். அந்த காலத்தில் விடுதலைக்குப் பாடு படாதவர் விடுதலைப் பத்திரிகை நடத்தினார். தமிழின் நீதி மறந்தோர் நீதிகட்சி ஆரம்பித்து அதில் சேர்ந்து நாட்டில் வெள்ளையனை ஆதரித்தார்கள். உண்மை சரித்திரத்தை மறைத்து திராவிடச் சரித்திரம் எழுதிக் கொண்டார். இதுதான் உண்மை. நாட்டில் சுயநலமாய்த் தாழ்த்த பட்டோருக்கு மட்டும் உதவி செய்துவிட்டு மற்ற மொத்த ஜாதி மதத்தினருக்கும் பாடு படாத அம்பேத்காரை மொத்த ஜனமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறானே? இவனும் அடிமட்ட சுயநலம் கொண்டவனாகத் தானிருக்கும்.

நாட்டின் 70% மக்களைப் பற்றிக் கவலைப் படாது இவன் ராஜாவாக வேண்டும் என்கிறான். அதுவும் தகுதி யில்லாமல், மறுப்பில்லாமல், ராஜாவாக நியமியுங்கள் என்கிறான். மற்றவர்களைப் பற்றி அன்றிலிருந்து இன்றுவரை இவர்கள் கவலைப் பட்டதே இல்லை. மற்றவர்கள் முன்னேற்றம் பற்றிப் பேசவும் மாட்டார்கள். தாங்கள் மட்டும் பெரிய அந்தஸ்திலிருக்க வேண்டும். மேலும் தான் தகுதி இல்லாதிருந்தாலும் ராஜா பதவி கொடுக்கவேண்டும் என்கிறார்.

இந்தத் திராவிடர் ஆட்சி தமிழ்நாட்டின் இருண்ட காலம் என்றே சொல்லலாம். தமிழர்களை மீண்டெழா வண்ணம் கெடுத்துக் கொண்டிருக்கக் கழகப் பணம் ஏராளம் உள்ளது. நாட்டைக் காட்டிக் கொடுக்கும் களவாணிக் கும்பல்களின் அடிவருடிகளே இவர்கள். தமிழர் கடவுள் பக்தி சீரழிய வேண்டும் என்பதே திராவிடக் கழகங்களின் நோக்கமாகும். இங்கு வேலை வெட்டி செய்யாது சிலக் கழகத் தலைவர்கள் பல ஆயிரங் கோடிகளுக்கு அதிபதியானது எப்படி? இவர்கள்தான் இந்தக் கைகூலிகளை அமர்த்திக் கூலி கொடுத்து தமிழைத் தாழ்த்தியும், காந்திக்கு மாசு கற்பிக்கவும் பேச வைக்கிறார்கள். அதன் கணக்கு வழக்கை யாரும் கவனிக்காததால் தைரியம் பெற்றுள்ளார்கள். இந்த அசையும் அசையா சொத்தை இவர்களிடமிருந்துப் பிடுங்கி அரசு கஜானாவில் சேர்த்தால்தான் நாடு உருப்படும்...!

கிருத்துவ மதத்திற்கு மாறிப் போனவர்கள் பைபிளில் ஞானத்தின் உண்மையைக் கண்டுபிடித்தோ ஞானம் வந்தோ மதம் மாறியவர்கள் இல்லை. தங்களிடம் உள்ளக் குறைகளை மறைக்கத்தான் இப்படி திடீரென மதம் மாறியுள்ளார்கள். தகப்பன் மதம் மாறினால் அவன் வம்சம் அப்படியே அந்த மதத்தையே பின்பற்றுகிறது. பின் வரும் சந்ததி அதை கவனிப்பதில்லை. ஆராயவும் முற்பட்டதில்லை. அப்பன் எந்த சந்தப்பத்தில் எந்தக் காரணத்திற்கு மதம் மாறினான் எனத் தெரிந்து கொண்டாலும் அதைப் பற்றிக் கவலைப் படமாட்டான். காரணம் தம் தந்தை தங்களை உயர்ந்த மதத்திற்கு மாற்றிப் பெரிய அந்தஸ்தை கொடுத்ததாகவே நினைக்கிறான். இந்திய நாட்டில் உருவாகாத மதத்தில் இருக்கிறோமே என்று அவன் கவலைப் பட்டதே இல்லை.

நம் முன்னோர்கள் அரசர் முதல் ஆண்டி வரை எவரும் திராவிடம் என்று சொல்லவில்லை. காரணம் திராவிடம் என்ற வார்த்தைத் தமிழில் கிடையாது. நம் பக்தி மார்க்க புத்தகங்களிலும் திராவிடம் என்ற யாரும் சொல்லி உபயோகப் படுத்தியதில்லை. நம் இலக்கியங்களிலும் எவரும் குறிப்பிட்டாரில்லை. நம் மன்னர்களோ நம்மைச் சார்ந்தவர்களோ கோயில்களிலோ, குளம், குட்டை, சத்திரங்கள், மண்டபங்கள் எதிலும் கல்வெட்டாய் செதுக்கி தாங்கள் திராவிடர்கள் என்று குறிப்பிடவில்லை. பாரதியும், பாரதிதாசன் கூட பிள்ளையார் முதல் அனைத்து இந்துச் சாமிகளைப் பற்றி பாடியுள்ளார்கள்.

ஆனால் இவை எதையும் ஆராயாது எவரோ சொன்னதை கேட்டு நம்பி தமிழர்கள் எழுபதாண்டுகளாய் சப்பாணியாய் போனான். கழக வெறியர்களிடம் தர்க்கமும் செய்தாரில்லை. ஆனால் அவர்களைக் காமெடியர்களாக நினைத்து சந்தோஷப்பட்டதே உண்மையாகும். ஆனால் திராவிடக் கழக அனுதாபிகள் எல்லோருமே படிக்காதவர்கள். அன்றைய கால கட்டத்தில் வெள்ளையனை ஆதரித்தவர்களுக்கு திராவிடக் கழகம் ஒரு நல்ல பொழுது போக்காக இருந்தது.

திராவிடக் கழகத்தில் ஆராய்ச்சி செய்யும் திறன் யாருக்குமே கிடையாது. அப்போதெல்லாம் பெரியார் மெல்லுவதற்கு இதுபோன்ற விஷயங்களை இடித்து அவலென அக்கட்சியின் அறிவாளிகள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை. இல்லாத திராவிடத்தை இட்டுக்கட்டி கோட்டையாக்கினார்கள். தமிழ் இலக்கியங்களைப் பற்றி ஆராயாது, படிக்காது, வளர்க்காது கழகத்தலைவர் எப்போதும் வசூல் வேட்டையில் குறியாக இருந்தார். அவர் குறிக்கோளை யாரும் அறிய முடியவில்லை. மற்ற தலைவர்கள் பொதுக்கூட்டங்கள், நாடகங்கள் நடத்தி அன்றாடம் காய்ச்சிகளாக இருந்தார்கள். இவர்கள் எல்லோரும் 1950 மற்றும் 1960 - 1967 வரை எல்லாப் பொதுக் கூட்டங்களில் மேல் துண்டுகளிலும் உண்டியல்கள் குலுக்கியும் பொது மக்களிடமும் அனுதாபிகளிடமும் பணம் வசூல் செய்து தங்கள் வீடுகளில் அடுப்பைப் பற்ற வைத்தவர்கள்தான். இன்றோ மக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள்.

ஆட்சியைக் கைப்பற்றியப் பிறகும் கூட திராவிடம் பற்றி திராவிடக் கழகத் தலைவர்களே நல்ல படித்தவர்களை வைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளாது விட்டார்கள். காரணம் திராவிடம் என்ற சொல்லே போதையூட்டும் ஒரு நல்ல பணம் காய்ச்சி மரமாக இருந்ததால்தான். திராவிட நாடு, திராவிட மொழியை விடுங்கள். தாங்கள் ஆட்சிக்கு வந்தப் பிறகுங் கூட தமிழிற்கு ஒரு நல்ல அகராதி எழுத முயற்சிக்காது பணம் சேர்ப்பதில் குறியாக இருந்தார்கள்.

காங்கிரஸ் காரனையும் பாப்பானையும் திட்டுவதே கழகத்தாரின் வேலை. தமிழரில் பலருக்கு இது மாலை நேரப் பொழுது போக்காகும். தமிழ் பற்றி வாய்க் கிழியப் பேசும் இவர்களுக்கு தமிழில் சொந்தமாக ஆராய்ச்சி செய்யும் திறன் யாருக்கும் இருந்ததில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். ஆட்சிக்கு வந்த பிறகும் இவர்கள் தமிழறிஞர்களை ஆராய்ச்சி செய்யத் தூண்டியதே இல்லை. காரணம் தாங்களே ஆராய்ச்சி யாளர்கள் போலக் காட்டிக் கொண்டு பொய்த் திராவிடத்தை வளர்த்தார்கள். அன்றெல்லாம் இவர்கள் உண்மையில் அன்றாடம் காய்ச்சிகள், கூலிக்கு மாராடித்தார்கள். இன்றுங் கூட பலபேர் அவர்களிடம் கூலிக்கு மாரடித்து புகழ் சேகரிக்க நினைக்கிறார்கள். ஏனோ அவர்கள் தமிழ் கடவுள்களை மட்டும் தொடர்ந்து கிண்டலடித்து வருகிறார்கள். வெகுளித் தமிழர்களும் திராவிட விதூஷகர்கள் பேச்சைக் கேட்டு மதி மயங்கி சிரித்துப் பொழுதை வீணேக் கழித்தார்கள், கழிக்கிறார்கள்... கொதித்தெழும் மான உணர்ச்சியற்றுப் போய்விட்டார்கள்.

அகத்தியன் கூட "பரிபூரணம்-1200" எனும் வேத நூலில் தென் வங்கத் தமிழ் மக்களை "வெகுளி" என்றே அழைக்கிறார். அகத்தியர் எழுதிய மற்றொரு வேத நூலான "பரிபாஷை-500" என்னும் நூலில் வட மொழி வேதங்களை தமிழருக்காக, தமிழர்கள் அறிவாளிகளாக மாற வேண்டும் என்ற பெரும் நோக்கில் அவற்றைத் தமிழில் செய்தேன் என்கிறார். தமிழன் இன்றும் அப்படியேத்தான் இருக்கிறான். சம்ஸ்கிருத நான்கு வேதங்களில் உள்ள அனைத்து ரகசியங்களும் உள்ளடக்கியது தான் சித்தர்களின் உண்மைத் தமிழ் வேத சாஸ்திரங்கள் நூல்களாகும். அகத்தியர் தமிழை உண்டாக்கிய காலத்திலேயே தம் நூலில் "தண்தமிழ்" என்றும் "செந்தமிழ்" என்றும் "பைந்தமிழ்" என்றும் கூறுகிறார்.

அகத்தியர் மறந்தும் கூட தமிழரைத் திராவிடர் என்று கூறவில்லை. ஆனாலும் தமிழன் ஏனோ எடுப்பார் கைப்பிள்ளையாய் "திராவிடனாய்ப்" போனான். இதைத் திராவிட கழகத்தாரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால் நரகலில் கைவைத்தாகி விட்டது. அதைவிட்டால் அவர்களார் அரசியல் செய்ய முடியாது என்று அறிந்துதான் திராவிடத்தைக் கைவிட மறுக்கிறார்கள்.

உலகு மொத்தமும் அவரவர் மொழியின் பெயரால் நாடு. இந்திய உபகண்டத்திலும் அப்படித்தான் அந்தந்த மொழியின் பேரால் நாடுகள் உள்ளது. ராஜஸ்தானில் ராஜஸ்தானி, வங்காளத்தில் பெங்காலி, பஞ்சாபில் பஞ்சாபி, நேப்பாளில் நேபாளம், காஷ்மீரில் காஷ்மீரி, மகாராஷ்ட்ரத்தில் மராட்டி, ஒரிசாவில் ஒரியா, கேரளாவில் மலையாளம் ஆந்திரம் தெலுங்கு, கர்நாடக கன்னடமாம். இங்கிலாந்தில் ஆங்கிலம், பிரான்சில் பிரெஞ்ச், இத்தாலியில் லத்தின், ஜப்பானில் ஜாப்பனிஸ், சீனாவில் சைனிஸ். கிரேக்கத்தில் கிரீஸ், ஆஸ்திரியாவில் ஆஸ்திரியம், கொரியாவில் கொரியன், மலேயாவில் மலாய் இப்படி அடுக்கிக் கொண்டேபோகலாம். திராவிட நாடென்றால் திராவிட மொழி எங்கே? நாடென்றால் மொழியுண்டல்லவா?

எங்கே போனது அந்தத் திராவிடமொழி. திராவிடத்தைச் சொன்னவவர் திராவிடம் என்ற மொழியில் ஒரு எழுத்தையும் ருசுப்படுத்திச் சுட்டிக் காட்டவில்லை. திராவிடத்தின் மொழியையும் காட்டவில்லை. திராவிடமொழி இல்லைக் கிடையாது என்பதை மறைக்க, 5 மொழிப் பாஞ்சாலியாய்க் கேலி பேசினர். தமிழில் திராவிடம் என்ற ஒரு சொல் இல்லாத போது அதைப் பற்றி பேசுவது மடத்தனம். தமிழில் எதாகிலும் ஒன்றில் திராவிடம் என்றச் சொல்லைக் காட்டிப் பேசச் சொல்லுங்கள் பார்ப்போம். ஆனால் இதை யாரும் செய்யமுடியாது. மேலும் அவர்கள் அனைத்துத் தமிழ் இலக்கியங்களைப் புரட்டிக்கூட பார்த்தவர்கள் கிடையாது. படித்தவர்களும் கிடையாது. நாட்டில் சுதந்திரத்திற்கு மக்கள்போராடிக் கொண்டிருந்த சமயத்தில் திராவிடத் திருடர்கள் கள்ளமாய் வளர்த்த மரம்தான் திராவிடம். நெல்லுக்கு நீர் பாய்ச்சும்போது திருட்டுப் புல்லும் வளர்ந்து மரமாகி நின்றுவிட்டது.

எரியும் கொள்ளியில் சுருட்டுப் பற்ற வைத்தவர்தான் அம்பேத்கார். ஜின்னா முஸ்லீமுக்காக தனிநாடு கேட்டதைப் பார்த்த அம்பேத்கார் வெள்ளையனுக்கு ஆதரவாகவே உள்ளடிவேலை செய்தார். தாழ்த்தப்பட்ட பெரும் ஜனங்களுக்கு பாகிஸ்தானைப் போல ஒதுக்கீடு கேட்க முற்பட்டதே உண்மை. முஸ்லீம் வேறுநாட்டிலிருந்து வந்த மதம். ஆனால் தாழ்த்தப் பட்டவர்களோ இந்துமதத்திலே இருந்தார்கள். அவர்கள் இருவரையும் வெள்ளையன் ஆதரித்துத் சுதந்திரத்துக்கு எதிராகத் தூண்டிவிட்டான். இதைத் தடுத்து ஆட்கொண்டவர்தான் காந்தி. அம்பேத்கார் இந்தியாவில் மற்ற பலஜாதி மக்களுக்காக ஒரு கல்லையும் தூக்கிப் போடவில்லை என்பதே உண்மை. அவர் தியாகியோ சுதந்திரத்திற்கு கடைசிவரை உழைத்தவரோ இல்லை. ஆரம்ப காலத்தில் சிலகாலம் ஆதரித்த இவர் சுதந்திரத்திற்காக அதிகநாள் பாடு பட்டவர் கிடையாது. காந்தி ஒத்துழையாமை இயக்கத்திலிருந்த போது முதலாம் வட்ட மேஜை மாநாட்டிலிருந்து காந்தியை கழட்டிவிட்டுவிட்டார்கள். அம்பேத்கர் யார்? முதல் வட்டமேஜை மாநாட்டில் வெள்ளையனிடம் கூடிக்கொண்டு சுதந்திரம் கேட்காது, தாழ்த்தப் பட்டோருக்கு தேர்தல் தொகுதி கேட்டவர்தான் இந்த அம்பேத்கார். மகாத்மா காந்தி இல்லையெனில் அம்பேத்கார் இல்லை. காந்தியும் காங்கிரசும்தான் தாழ்த்தப் பட்டவருக்குச் சலுகையும் தொகுதியும் ஒதுக்க ஏற்பாடுசெய்தவர்கள். ஜின்னவா அம்பேத்கர்? நம் இந்தியர்தானே. அம்பேத்கார் பிறப்பில் இந்துத்தானே. இது அவரின் சொந்தங்களுக்குத் தெரியும். முன்னோருக்கும் அவர்களின் குடும்ப வாரிசுகளுக்கும் தெரியும்.

இந்தியச்சட் டம்ஏழு பேரால் இயற்றியதாம்
பந்த்முன்ஷி அல்லாடி ஐயரும் --- சந்தம்
கிருஷ்ணசாமி ராவ்மாதவ் கோபாலன் இன்னும்
கிருஷ்ணமாச் சாரிடீடீ கே

சட்டம் பற்றி கவனித்துக்கொண்ட 9-பேர்கொண்ட குழுவிடம் காந்தி அம்பேத்காரைச் சுட்டிக் காட்டிச் சிபாரிசு செய்ய அவர்களால் இந்தியச் சட்டமியற்றும் குழுவுக்கு அம்பேத்கர் தலைவராக்கபட்டார். இந்த 9 பேர் கொண்டக் குழுவும் காந்திச் சொன்னதால் இந்தியச் சட்டத்தில் தாழ்த்தப் பட்டவர்கள் முன்னேற அம்பேத்கரை வைத்து ஒட்டையிட்டு தாழ்த்தப் பட்டவர்களுக்கு பலப் பல சலுகைகள் அங்கங்கேக் கூட்டினார்கள். அன்று அந்த காந்தி வகுத்த ஒட்டையினால்தான் தாழ்த்தப் பட்டவர் முன்னேற்றம் கண்டார்.

இந்த முழுப் பூசணிக்காயை எல்லாத் தலைவர்களும் பெரியார் அண்ணா முதற்கொண்டுத் தமிழகத்தில் மறைத்துப் பேசினார்கள். எதிலும் தகுதி என்ற சொல் இந்தியச் சட்டத்திலிருந்து காந்தியால் தாழ்த்தப்பட்டோருக்காக அழிக்கப்பட்டது. தகுதி இல்லாத கொடுமையால் தகுதி இல்லாதவரெல்லாம் துள்ளுவதைத தற்போது பார்க்க முடிகிறது.

ஒருவர் காந்தி ரயிலில் செய்த ஆப்ரிக்கப் பயணத்தை கிண்டல் செய்கிறார். தன்னை மற்றவர் பரிகாசம் செய்யவா காந்தி தனது சுயசரிதை எழுதினர்? அவரென்ன காந்தியுடன் பிரயாணம் செய்தவரா ? காந்தியின் மனசாட்சியா ? கூலி வாங்கி பேசும் கயவர் கூட்டத்தைச் சேர்ந்தவரே. பெரியார் வாரிசுகள் அந்த பேச்சைத் தலை திருப்பிப் பார்த்து ரசிக்கிறது. ஒரு தலைவனை அதுவும் காந்தி இறந்து 70-ஆண்டுகளானப் பிறகு, அச்சிறுவன் கூட இருந்து பார்த்தவன் போல விவரிக்கிறான், ஏசுகிறான். அவனை தடுக்காது வாய் பிளந்து ரசிக்கிறார்கள் சுயமரியாதை கேட்கும் மரியாதைத் தெரியாதைக் கும்பல். சுயமரியாதை கட்சி என்றும் கூறிக் கொள்கிறார்கள். மற்றவர் மானம் மரியாதையைக் காற்றில் பறக்கவிடும் ஜென்மங்கள். இவர்களில் எவராவது சுயசரிதை எழுதினால் என்னவாகும். 100 முறை சந்தி சிரித்திருக்கும். அதுவும் வெளியில் வந்திருக்கும்.

தமிழ் சைவர் அறுவகை சமயம் கண்டார். பின் வைஷ்ணவம், பின் சமணம் கண்டான். அகத்தியனால் புத்த மதம் தமிழ் நாட்டில் கிடையாது. தற்போது சாயிபாபா, ஐயப்பன், ராகவேந்தரா என்றே பல பல பிளவாகிப்போனான். போதாக்குறைக்கு இசுலாம், கிருத்துவராய் மிகப்பெரிய அளவில் பிரிந்ததில் தமிழர் உண்மையில் குறைந்து போனார். பலரும் தமிழரிலிருந்து மதம் மாறிய கிருத்துவரை உண்மைத் தமிழர் ஒன்றும் கருத்து சொல்லாபோது இந்த கிருத்துவர்கள் எதையோ ஆராய்ந்து கண்டபிடித்துவிட்ட ஞானிகள் போல உண்மைத் தமிழர்களையும் அவர்களின் கடவுளர்களையும் பள்ளிப் பிள்ளைகளின் மத்தியிலேதான் சாத்தான் என்று இழிவாய்ப் பேசி மூளைச் சலவைச் செய்கிறார் என்றால் போதாக்குறைக்கு பொது மேடைகளிலும் இப்போது நையாண்டி செய்கிறார்கள்.

யாருக்கும் போதிய படிப்பறிவு இல்லாத நிலையில் ஊடங்களில் கலந்தாய்வு எதற்கு ? தமிழர் கோவில்களைக் கிருத்தவன் ஒருவன் சாத்தான் கோயில்கள் என்றான்!!! மற்றவரை மதிக்காது மற்றவர் மனதை புண்படுத்துபவனே சாத்தான். அப்படிஎன்றால் அவன்தானே சாத்தான். முன்னம் அவரின் மொத்த மூதாதையரும் இந்துக்களாக இருந்தவர்கள். அவர்களின் இப்போதைய வாரிசுகள் மதம் மாறி இந்துக்களையே திட்டித் தரம் குறைப்பவன் சாத்தான் தானே.... அவன்தானே சாத்தான். ஒரு சாத்தானால்தான் இப்படிப் பேச முடியும். அதற்கு வருத்தம் தெரிவிக்காமல் கிருத்துவப் பாதிரியொருவர் மத நல்லிணக்கம் மறந்து மீண்டும் தமிழ் கடவுள்களைக் கல் என்று பேசுகிறார். இதற்கேன் கலந்தாய்வு.

அந்தக் கலந்தாய்விலே மீண்டும் அதிலொரு சாத்தான் வந்து மீண்டும் திட்ட விடுவதுதான் கலந்தாய்வா? தவறு செய்தவன் எவனோ அவனை கண்டிக்காது விட்டு விட்டது தரமிலா ஊடகங்கள். ஒரு பாதிரி, பாவம் அவருடைய வேதத்தையே அவர் முழுமையாய் படித்தறியாதவர். அவரை மேடை ஏற்றி கலந்தாய்வு நடத்தலேன்? இது தேவையில்லாத ஒன்றே. அந்த பாதிரி வந்து மீண்டும் தமிழ்க் கடவுள்களை கேலி பேசிச் சென்றார். தமிழர் தரப்பில் ஊடங்கள் நன்குக் கற்றறிந்தவரை உட்கார வைக்காமல் காவி வேட்டி கட்டிய எவரையோ உட்கார வைத்ததால் அவன் பதிலுக்கு வாய்மொழி கூறாது சிரித்தானே!! அதை நினைத்தால் வயிறு எரிகிறது. இந்துக்களை யார் திட்டினாலும் கண்டிக்காது அதை விளம்பரப்படுத்த நினைக்கிறதே எல்லா ஊடகங்களும் ஏன்? இவர்களில் ஒருவன் கூடவா இந்தியாவில் பிறந்த இந்து இல்லை? சுரணையோ, ரோஷமோ இல்லாதவர்களா எல்லோரும்? ஊடங்களில் எந்த இந்துவும் இல்லாமல் அதையும் ஒழித்துவிட்டார்களா? பின் இந்துக்கள் ஒருவனுக்குக்கூட ரோஷம் இல்லையா? ஏன் ஒரு ஊடகம் கூட ஆரம்பிக்கவில்லை?

அந்த பாதிரிப் பேரறிஞர் போலவும் பேசினார். சிவவாக்கியர் என்னும் சித்தர் நட்டக்கல்லை வைத்துமே நாலு புஷ்பம் சாத்தியே முணுமுணுத்து சுற்றி வரும் பேதைகாள் நட்டகல்லும் பேசுமோ சுட்ட சட்டி சட்டுவம் கறிசுவை அறியுமோ என்று பாடியுள்ளார் என்று குறிப்பிட்டும், காலில் போட்டு மிதிக்கும் கல்லை தெய்வமென வணங்கல், தொழல் ஏன் எனவும் சித்தர் சொன்னதாக கூறினார். அதற்கு தமிழர் பக்தித் தரப்பில் பேச வந்தவர் பதில் கொடுக்க தெரியாமல் முழித்தார். ஐயோ பாவம். அதற்கு பதிலென இங்கு சென்றவருடம் எழுதிப் பிரசுரித்த ஒரு பாடல் இங்குக் குறிப்பிடப்படுகிறது.

(வெண்பா)

பதினெண்சித் தில்மூலர் பௌத்ரன்சி வாக்யர்
மதிநிறைப்பா ஆயிரம்பு னைந்தார் --- சதியாய்ப்
பகுத்தறிவா ளர்திரிக்க மக்கள் நகுத்து
மகுடிநாக மாகமானார் ஏன்

கல்மீதுப் பூவைத்து மெல்ல முணுமுணுத்து
நல்லதெனச் சுற்றி வருகிறார் --- கல்சட்டி
அட்டில் கறிசுவைச் சட்டுவம் சொல்லாது
உட்கிடை நாதனுள்ளி ருப்பு

--- ராஜ பழம் நீ (24-Oct-2017)

"சிவவாக்கியர்-1௦௦௦" என்ற பாடல்களில் 638-வது பாடல் கருத்து மேலே சொல்லியது போல அமைந்துள்ளது. இதைக் கண்ட திராவிடக் கழக மேடைப் பேச்சாளர்கள். இந்தக் கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அக்கால அரசியல் மேடைகளில் இந்துக்களை மனம் நோகப் பேசிவந்தார்கள்...! கல்லை மட்டும் வணங்காது கடவுளின்உண்மை நிலைபாட்டை அறிந்து எதையும் வணங்குங்கள் என்றே சித்தர்கள் சொல்லுகிறார்கள்...! அது கிருத்தவருக்கும் புரியாது!! அவர்கள் அவ்வளவு ஞானம் பெற்றவர்கள் கிடையாது!!! ஆனால் சிவவாக்கியர் 651-வது பாடலில் கல்லும் தெய்வமாகும் என்று கூறியக் கருத்தைச் கழகத்தார் சொல்லாமல் மறைத்துப் பேசித்தான் கைத்தட்டல் வாங்கினர். அந்த சூன்யங்களுக்கும் பாடல் தெரியாது போலும். அந்த பாதிரிக்கும் அறைகுறை படிப்பறிவு போலும்.

சிவவாக்கியர் எழுதிய 651 வது பாடல்
(சந்தக்கலிவிருத்தம்)

ஐந்துஎட்டு மென்றபோது நட்டகல்லும் தெய்வமே
சந்தையை யொழித்தபோது சிந்தையொன்ற தாகுமே
பந்தமுள்ள மானிடர் பகுத்தறியா தழிவதால்
எந்தைநாத னென்செய்வா னீரறிவீர் பித்தரே!

கருத்து:
அகர உகர மகர என்ற மூன்றும் நமசிவாய என்ற ஐந்துடன் சேர நட்டக்கல்லும், மனம் ஒரு நிலையாக்க சந்தேகமொழிந்து சிந்தை ஒன்றாகி வணங்கக் கல்லும் தெய்வமாகும். ஐந்தையும் எட்டையும் மானிடர் பகுத்தறியாது அழிகின்றார். நாதனாகிய எம் கடவுள் எங்கும் வியாபித்திருக்க அவர் என்ன செய்வார் பித்தரே அறிந்துகொள்ளுங்கள் என்பதாகும் ( ராஜப் பழம் நீ - 24 Oct 2017)

மற்ற எந்த மதத்தவரும் அறியார் - இந்த மூன்று, ஐந்து, எட்டு, என்ற சூசக வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்து கொள்ளாமல் படிக்காத அரைகுறைகள் புரியாது உளறுகின்றார். தமிழிலிருந்து மதம் மாறிய தமிழ் கிருத்துவர்கள் இதை உடனடியாகத் தவிர்க்க வேண்டும். கொலை செய்யப் பட்டவர் தற்கொலை செய்து கொண்டவர்கள்தான் பிசாசாய் மாறுவர் என்பது நம்பிக்கை. கிருத்துவர்கள் இதைப் புரிந்து கொள்ளல் வேண்டும். இங்கிருந்து மதம் மாறிய கிருத்துவர் களுக்கும் இந்த விஷயம் தெரியும்.

இதை மட்டுமா சித்தர்கள் சொன்னார்கள். எல்லா சாதிக்கும் மதத்தார்க்கும் உலக நாட்டவர்க்கும் பொதுவான பல பொதுவானக் கருத்துக் களையும் சொல்லியுள்ளார்கள் உதாரணத்திற்கு: -

"பிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சே என்றும் கறந்த இடத்தைக் காணுதேக் கண்" என்று எவரும் வெளிப்படுத்தாதக் கருத்தையும் சொல்லியுள்ளார்கள். எப்போதும் சித்தர்கள் ஒரு கருத்தைச் சொன்னால் கண்மூடித் தனமாய் அதைப் பின்பற்றிப் பேசல் கூடாது. அந்தக் கருத்துக்கு மாறான கருத்தை 10 அல்லது 20 பாடல்களை தாண்டி அந்த கருத்தின் உண்மையை அங்கேக் கூறியிருப்பர் சித்தர். திருமூலர் "கருக்கிடை-300" எனும் நூலின் ஒரு பாட்டில் காக்கை இரண்டும் கரு நீலி பொற்றலையான் வாக்கிற்கினிய வல்லாரை இவை ஐந்தும் பாக்கள வேணும் பாலில் குழைத்துண்ண ஆக்கைக் கில்லை அழிவு ஆயிரமாண்டு என்றார்.

இதைப்படித்தவர் உடனே இந்த ஐந்தையும் சாப்பிட்டாரானால் உண்மையில் ஆயிரமாண்டு வாழ முடியாது. அந்தப் பாட்டிற்குப் 10 பாடல்கள் தள்ளிச் சென்றுப் பார்க்க இந்த ஐந்தையும் பொலியக் கருப்பாக்கிச் சாப்பிட வேண்டும் என்கிறார். அப்படி ஐந்தையும் கருப்பாக்க வேண்டிய முறைகளையும் சொல்கிறார். கருப்பாக்கிச் சாப்பிட ஆயிரம் ஆண்டு வாழ முடியுமா? அதுதான் இல்லை. அதில் காய கற்பக்கரு மருந்தைச் சேர்த்துச் சாப்பிட உண்மையில் ஆயிரமாண்டுகள் வாழ முடியும். சித்தன் போக்கு சிவன் போக்கென்பார் அறிவாளிகள். சித்தர் புத்தகங்கள் 500-க்கும்மேல் இருக்கிறது. இவையெல்லாம் படித்தவர்கள் தான் உண்மைத் தமிழர்கள். அவர்கள்தான் சித்தர்கள் சொன்னவைகளைக் கையாளமுடியும். மற்றவர்கள் வாய்த்திறவா மௌனியாய் இருப்பதே நல்லது.

சபை நடத்துபவனோஉண்மையில் எல்லா விஷயமும் அறிந்த மேதாவியாய் இருத்தல் அவசியம். ஆனால் அவர் மேதாவி அல்ல? வெறும் காலி டப்பா. தமிழர் தரப்பில் வாதாடு பவனோ இந்துக்களை ஆதரிக்கும் வெருங்காவி யுடைக்காரன், சரக்கில்லாதவன். இவன் அங்கும் தன்னைத் தாக்குபவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே உட்கார்ந்திருக்கிறான். ஆனால் எதிராளிப் பாதிரியாரோ தமிழராய் இருந்து கிருத்துவராக வேறு காரணங்களுக்காக மதம் மாறியவர். அவருக்குத் தமிழ் மட்டும் பேசவரும். அவர் தன் வேட்டிக் கிழிந்திருப்பதை அறியாது எதிராளி வேட்டி கிழிந்துள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார் பாவம். உள்நாட்டு மன்னர்களால் புத்தமும் ஜைனமும் நுழைந்து ஹிந்து மதத்தை குறைத்தது. வெளிநாட்டினர் படையெடுப்பால் முஸ்லீம் வந்து ஹிந்துக்கள் குறைந்தார்கள். வணிகம் செய்ய வந்த வெள்ளையனால் நாடு பறிபோனது மல்லாது இந்தியர்களைக் கிருத்துவர்களாக்கி அக-மகிழ்ந்தார்கள்.

அவன் நம் மொழிகளை நன்கு கற்றிந்தவர்களுக்குக் கூலி கொடுத்து தாங்களே அம்மொழியைக் கற்றதாகப் புளுகிப் பைபிள் செய்து கொண்டு கிறித்துவத்தைப் பரப்பினார்கள். காரணம் தமிழர் சரியான பதிலடி கொடுக்க முடியாது அவன் திராவிடமாகிப்போனான். தயவு செய்து கிருத்துவர்கள் தங்கள் ஒரே வேதத்தை நன்றாய் ஆராய்ந்து ஒழுங்காகப் படித்து, முடிந்தால் அதில் உண்மை பொய்களை ஆராய்ந்தபின் பின்பற்றச் சொல்லவேண்டும்.

மற்றபடி அவர்கள் முன்னிருந்த மதத்தையாவது சரியாகப் படித்ததிருக்க வேண்டும். இப்படி எதையுமே படிக்காது மத போதகர்களாவது எப்படி? ஏன்? எதற்கு? எதையும் படிக்காது, ஆராயாது எப்படிப் பாதிரியானார்கள். இந்தப் பாதிரிகள் குறுக்கு வழியில் பொய்ப் பாதிரிகளானதேத் தவறு. மேலும் படிக்காது ஆராயாது கேலி பேசல் தவறு. பல பாதிரிகளை பைபிளில் கேள்விகள் கேட்டபோது பதில் தெரியாது, அப்படி இருக்காது, அப்படி எழுதி இருக்காது என்றார்கள். பைபிளில் வசனங்களைக் காட்டிக் கேட்டபோது பதில் சொல்ல முடியாது விழித்துள்ளார்கள். வெள்ளையர்களே இப்போது பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது கடவுள் ஆதாமுடன் பலரை படைத்தான் என்றும் பல பல கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இது நூறாண்டுகளாக நடக்கிறது. இதைக் கிருத்துவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

மதம் மாறினாய் பேசாமல் போய்விடுங்கள். நீங்கள் இருந்தப் பழைய இந்து மதத்தைச் சீண்டாதீர். மதம் மாறிடவா உங்களுக்கு அன்றுத் தியாகிகள் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்கள். சுந்தந்திரத்திற்கு பாடு படாக் கூட்டம் மண்டி போட்டு சொத்து சேர்த்துக் கொண்டது உண்மைதான், மறுக்கமுடியாது. லஞ்சம் வாகுவதில் காங்கிரசை விட இமாலய சாதனைகள் புரிந்தார் திராவிடர். அப்படி சேர்த்த சொத்தை மூலதனமாக்கி இப்போது உண்மைத் தமிழகத் தமிழர்களை கண்ட கண்ட அரை வேக்காடுகளை எழுத்தாளர் போர்வையில் மேடை ஏற்றி தமிழறிஞர்களையும், பார் வேந்தர்களையும், தியாகிகளையும், எல்லோரையும் வாய்க்கு வந்தபடி திட்டி ஏசச் செய்கிறார்கள். தமிழர் ஒற்றுமையைக் குலைத்துக் கொண்டிருக்கும் கோடாரிகளிவர்கள்.

இதுதவிர தற்போதிருக்கும் குழப்பமான இந்த வேளையில் எல்லா மதத்தவர்களிலும் ஒருவரைக் கூப்பிட்டு அவரை அறிவாளியா இல்லையா என ஆராயாது கூப்பிட்டு, வேலை வெட்டியிலாத ஊடகங்கள் கலந்தாய்வு என்ற பெயரில் பேசச் செய்கிறார்கள். பல பாதிரிகளுக்கு தங்களின் வேதத்தில் பாதிகூட தெரியாத நிலையில் தமிழ் கடவுள்களை இழிவாய் பேச ஊடகங்கள் அனுமதிப்பதேன். கைக்கூலிகள்தான் இந்த நிகழ்ச்சிகளை கைக்கூலிகளை ஏற்படுத்தி மேடையேற்றி நடத்துகிறார்கள் போலும். ஒன்று கலந்தாய்வு நடத்துபவன் அறிவாளியாய் இருப்பின் சரி. ஆனால் அவரோ முழு மூடன். யார் எதைச் சொன்னாலும் தவறைச் சுட்டிக் காட்டித் தடுக்காது எதற்காகப் பேசவிடுகிறார். இதை எல்லா மதத்தினரும் அறிய வேண்டியது எனக் கேட்டுக்கொள்கிறேன்.

முஸ்லீம்கள் இந்துக்களைத் தாக்கிப் பேசுவது கிடையாது. இந்துக்களும் அப்படிதான். முஸ்லீம்கள் அவர்கள் மதத்தை ரகசியமாக வளர்க்கிறார்கள். யாரும் பிறமதத்தை இழிவாய் பேசுவதில்லை. ஆனால் கிருத்துவர்கள் மொத்த பைபிளையும் படிக்காதும், அதன் உட்கோட்பாட்டினை ஆராயாதும் பிற மதத்திற்குத் தாவுபவர்கள். வேதங்களை படிக்காது எதோ ஒரு காரணத்திற்காக மதம் மாறிவிட்டு எதுவும் தெரியாது ஏறிவந்த முன் மதமான இந்து மதம் எனும் ஏணியை உதைத்துத் தள்ளுகிறார்கள். நாம் பைபிளைப் படித்திருக்கிறோம் குரானையும் வாசித்திருக்கிறோம். முஸ்லிம்கள் பிற மதத்தை மதிக்கிறார்கள், ஆனால் கிருத்தவரோ கர்வமாய் பேசித் திரிகிறார்கள். இப்படி பேசினால் மக்கள் கிருத்துவ மதம் உயர்ந்த மதம் என மற்றவர்கள் நினைப்பார்கள் என்ற நப்பாசையில் நம்புகிறார்கள். உங்களை இந்துக்கள் மதிப்பது போல் நடிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நீங்கள் யார் என்பதை அவர்கள் புரிந்து வைத்துள்ளார்கள்.

போகர் எனும் சித்தர் 7000-பாடல்களை எழுதியுள்ளார். ஏசுவின் 12-சீடர்களை சந்தித்ததாக கூறியுள்ளார். நபிமார்கள் கூட்டத்தை சந்தித்ததாகவும் பேசியதாகவும் கூறுகிறார். போகர் சித்தர் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று நம்புகிறோம், அதனால்தான் அவர் சொன்னார் என்று சிலவற்றை நம்புகிறோம். ஆனால் கிருத்துவரின் பேஸ் மட்டம் வீக் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆதியாகமத்திலே
அதிகாரம் 1-ல் வசனம் 1-ல் ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

பிறகு சமுத்திரத்தைப் படைத்தார் பறவை, மீன்களைப் படைத்தார். பின் ஆதாம் ஏவாளைப் படைத்தார்.

அதிகாரம் 5-ல் வசனம் 1-ல் ஆதாமின் வம்சவரலாறு. தேவன் மனுஷனை சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவச்சாயலாக உண்டாக்கினார். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நூற்று முப்பதாவது வயதிலே சேத் பிறந்தான்.

6-வது வசனத்தில் "சேத் நூற்றைந்து வயதானபோது எனோசைப் பெற்றான்".

7-வது வசனத்தின்படி " சேத் எனோசைப் பெற்றபின் எண்நூற்றேழு வருஷம் உயிரொடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்".

எந்த வசனத்திலும் சேத் யாரை மணந்தான். எந்த உறவுக்காரியை எந்த உறவு சொல்லி மணந்தான் எந்தெந்தப் பெண்களுக்கு என்னென்ன குழந்தைகள் பிறந்தது என்பது இன்று வரை பதில் சொல்லமுடியாக் கேள்விக் குறியாய் நிற்கிறது. இதை அந்த பாதிரியினால் அந்த பைபிளை வைத்து பதில் கூற முடியாது. இந்தக் கேள்விக்கு பலரும் பல நூறாண்டுகளாக வெள்ளையர்களே ஒத்துக்கொள்ள முடியாத விடையைத் தருகிறார்கள். வெள்ளையர்களேக் கிண்டலடிக்கிறார்கள்.

வசனம் 11-ல் "பூமியானது தேவனுக்குமுன்பாகக் சீர் கெட்டதாக இருந்தது. பூமி கொடுமைகளால் நிறைந்திருந்தது". கர்த்தர் தடுக்கவில்லையா? மொத்த ஜனத்தொகையை சாகடிக்குமளவுக்கு மொத்த ஜனமும் என்னப் பெரிய குற்றமாக செய்தார்கள்?
பேழையில் நோவாவும் அவன் குடும்பமும் தப்பித்தது. அப்படித் தப்பித்த நோவாவின் குடும்பம்தானே பூமியெங்கும் இருந்ததாக பைபிள் கூறுகிறது. பிறகு பல தேசங்களில் குடியேறிய அவர்களை கண்ட கண்ட மற்ற தெய்வங்களைக் கர்த்தர் வணங்க விட்டதேன்? இஸ்ரவேலரின் தேவன் என்று தன்னைக் கூறிக்கொண்டு இஸ்ரவேலர் மட்டும் அவரை வணங்கினால் போதும் என்ற அடிப்படையில் கர்த்தர் செயல் பட்டதேன்? நான் இஸ்ரவேலரின் தேவன் என்று தன்னை அழைத்துகொண்டதேன்?

எரேமியா அதிகாரம் 46 வசனம் 25-ல் "இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்கிறது என்னவென்றால்........பார்வோனையும், எகிப்தையும் அதின் தேவர்களையும் அதின் ராஜாக்களையும்..... வசனம் 26-ல் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவரின் கையிலும்"...

ஏசாயா அதிகாரம் 52 வசனம் 12-ல் "இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராக இருப்பார்."(இஸ்ரவேலரை மட்டும் காக்கிறாரா?)

நாளாகமம் அதிகாரம் 30 வசனம் 1-ல் "அதன் பின்பு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு."

எசக்கியேல் அதிகாரம் 36 வசனம் 22-ல் ஆதலால் நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்ன வென்றால்

வசனம் 32 வரை பல இடங்களில் தன்னை இஸ்ரவேரின் தேவன் என்றுக் கூறிகொள்கிறார்.

புற ஜாதியர்களால் (எகிப்தியர்கள், பெர்சியர்கள், பாபிலோனியர்கள், அர்மீனியர்கள்) பரிசுத்தம் குலைக்கப்பட்டதை சீர்செய்து பரிசுத்தப் படுத்தி உங்கள் சொந்த தேசம் அனுப்புவேன் என்கிறார். மற்ற தேசத்தவரை கர்த்தர் எனும் கடவுள் புறஜாதி என்றும் இஸ்ரவேலரை மட்டு என் ஜனங்களே என்றும் ஏன் அழைத்தார் ?

மற்ற தேசத் தேவன்களை நீங்கள் வணங்காதீர்கள் என்று இஸ்ரவேலரிடம் ஏன் பைபிளில் பல இடங்களில் பலமுறை கெஞ்சுகிறார்.இஸ்ரவேலர்கள் சொல்லியும் கேளாததால் அவர்களை மிருகங்களை ஏவி விட்டும், கொள்ளை நோயாலும், கத்தியாலும் வெட்டி கொலை செய்கிறார்.

கடவுளுக்கு உருவம் இல்லை எனச்சொல்லும் கிருத்துவர்கள் இதையும் அறிவார்களா? கர்த்தருக்கே உருவம் இருந்தபோது அதையேன் மறுக்க வேண்டும் மறைக்க வேண்டும் அவர் மனுஷனை என் சாயலாகப் படைத்தேன் என்று அவரே அதைக் கூறியிருக்கிறார். அப்படியானால் கர்த்தருக்கு உருவம் உண்டா இல்லையா?

யாத்ராகமம் வசனம் 33 வரை யாத்ராகம் அதிகாரம் வசனம் 20-ல் "நீ என் முகத்தைக் காணமாட்டாய். ஒருமனுஷனும் என்னை கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார். வசனம் 22: என் மகிமைக் கடக்கும்போது நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து நான் கடந்து போகுமட்டும் என் கரத்தினாலே உன்னை மூடுவேன். வசனம் 23ல்: பின்பு என் கரத்தை எடுப்பேன் அப்போது என் பின் பக்கத்தைக் காண்பாய் என் முகமோ காணப் படாது என்றார்".

அப்படியானால் மோசே என்கிறவன் கடவுளின் பின் பக்க உருவத்தைக் கண்டுள்ளார். கடவுளுக்கு உருவம் உண்டு என்பதை மோசே கண்டது உண்மைதானே? உண்மைதான்.

பைபிளை முழுவதையும் நன்றாய் படிக்கவேண்டும். காரணம் பைபிளில் கடவுள் உருவம் பற்றி மற்றும் ஒருவர் சொல்கிறார். எசக்கியேல் தீர்கதரிசியின் புஸ்தகம் "அதிகாரம் 1-ல் வசனம் 26-ல் "அவைகளின் தலைக்கு மேலுள்ள மண்டலத்தின் மீதில் நீலரத்தினம்போல் விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும், அந்த சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷ சாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது. வசனம் 27-ல் அவரது இடுப்பாக காணப்பட்டது முதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்னிமயமான சொகுசாவின் நிறமாக இருக்கக் கண்டேன். அவரது இடுப்பாகக் காணப்பட்டது முதல் கீழெல்லாம் அக்னிமயமாகவும் அதைச்சுற்றிலும் பிரகாசமாக இருக்கக் கண்டேன்".

அதிகாரம் 1 வசனம் 3-ல் "கர்த்தரின் கரம் அவன் மேல் அமர்ந்தது"
அதிகாரம் 2 வசனம் 9-ல் "அப்போது இதோ என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்"
அதிகாரம் 3 வசனம் 10-ல் "ஆவி என்னை உயர எடுத்துக்கொண்டது நான் என் ஆவியின் உக்கிரனத்தினாலே மனம் கசந்து போனேன். ஆனாலும் கர்த்தருடைய கரம் என் மேல் பலமாக இருந்தது".

வசனம் 22-ல் அவ்விடத்திலே கர்த்தருடைய கரம் ஏன் மேல் அமர்ந்தது. 8-வது அதிகாரம் 1-வது வசனத்தில் கர்த்தராகிய ஆண்டவின் கரம் அங்கே என்மேல் அமர்ந்திருந்தது. வசனம் 2-ல் அப்பொழுது இதோ அக்னிச் சாயலாய்த் தோன்றுகின்ற ஒருவரைக் கண்டேன்.அவருடைய இடுப்புக்குக் கீழெல்லாம் அக்னியும் அவருடைய இடுப்புக்கு மேலெல்லாம் சொகுசாவைப்போல் பிரகாசிக்கிற சாயலுமாயிருன்தது." வசனம் 3-ல் "கைபோல் தோன்றினதை அவர் நீட்டி என் தலை மயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார். ஆவியானவர் என்னை பூமிக்கும் வானத்துக்கும் நடுவே கொண்டு போய் தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வட திசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார்".

கர்த்தர் மனுஷ சாயலாக இருந்ததை இசக்கியேல் பார்த்ததாகவும் அவருடைய பெரிய கையைப் பார்த்ததாகவும் அது அவரை வானம் வரை தூக்கியதாக சொல்வதால் பைபிளின் கர்த்தருக்கு உருவம் உள்ளது என்பதைத்தானே விளங்குகிறது.

கர்த்தர் தன்னை வணங்காதவர்களை எவ்வளவு எவ்வளவு மக்களை மிருகங்களை அனுப்பிக் கொன்றுள்ளார், கொள்ளை நோயினாலும் பட்டயக் கத்தியாலும், முற்றுகை யாலும் பலமுறை சாகடித்துள்ளார். ஏன்? இஸ்ரவேலர்கள் தன்னை வணங்காது பிற தெய்வங்களை வணங்கினார்கள் என்ற குற்றத்திற்காகத்தானே ? - கர்த்தர் தன்னை "எரிச்சலான தேவன்" என்று சொல்லிக் கொள்கிறார். எகிப்பது, அசீரியா, பாரசீகம், இத்தாலி, ரோம், மாக்கா, கானான் சீதோம், பலஸ்தீன பாபிலோன், ஆர்மீனியா போன்ற நாடுகளுக்கு வேறு கடவுள் என்று சொல்கிறார். தன்னை அடிக்கடி இசரவேலர்களின் தேவன் என்று சொல்லிக் கொள்கிறார். இஸ்ரவேலைச் சுற்றியுள்ள பல நாட்டு மக்களை எல்லாம் வசை பாடுகிறார். அவர்களின் தேவன் வேறு என்கிறார். தான் இஸ்ரவேலின் தேவன் என்றும் இது ஏனென்று இன்னும் விளக்கப்படாத விஷயங்களாக இன்றுவரை இருக்கிறது.

எகிப்து தேசத்து பார்வோனை இஸ்ரவேலரை விட்டு அழிக்காது தன்னை வணங்காத பாபிலான் நேபுகாத் நேசர் எனும் பாகால் விக்ரகங்களை வணங்கும் பாபிலானின் ராஜா எகிப்தை அழிப்பான் என்று சொல்வதேன்? இஸ்ரவேலர்களை அனுப்பி எகிப்தை ஏன் அழிக்கவில்லை?

கர்த்தரை சங்கீதமாய்ப் பாடிய தாவிது. கடைசியில் தவிர்த்து விக்ரகங்களை் வணங்கினான் என்று கர்த்தரே கூறுகிறார். தாவிது எப்படி மற்ற தெய்வங்களை எப்படி நம்பி ஏற்றுக்கொண்டான், ஏன் கும்பிட்டான்? கர்த்தரைப் பாடிய சாலமோன் கடைசியில் விக்ரகங்களைக் கும்பிடவிட்டதேன் ? தகப்பனும் மகனும் பிற மதத்தை தழுவி ஓடியதேனோ? இஸ்ரவேலின் கர்த்தர் குட்டி தேவன் என்பதாலா?

எசக்கியேல் 10-ம் அதிகாரம் 1-ஆம் வசனத்தில் "இதோ கேருபீன்களுடைய தலைக்கு மேலிருந்த மண்டலத்தில் இந்திர நீலரத்தினம் போன்ற சிங்காசனச் சாயலான ஒரு தோற்றத்தைக் கண்டேன். அது அவைகளுக்கு மேல் காணப்பட்டது. அவர் சணல் நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி.... " ஏதோ கட்டளையிடுகிறார். இதைப்போல் அந்த புஸ்தகத்தில் பல இடங்களில் இசக்கியேல் கர்த்தரின் கரம் தன் மேல் பட்டதாகவும் பலமாக வைத்ததாகவும் இப்படி பல தடவை பல வருடங்களாகப் பேசியதாகவும் குறிப்பிடுகிறார்.

இப்போதுள்ள கிருத்துவர்கள் நாங்கள் எசுவைத்தான் வணங்குகிறோம் கர்த்தரைக் கைக்கழுவி விட்டு விட்டோமென்று சொல்லலாம். ஆனால் இயேசு கிருத்துவோ அவரே புதிய ஏற்பாட்டில் மத்தேயு எழுதிய சுவிஷத்தில் 7-ம் அதிகாரத்தில் 21-ம் வசனத்தில் இயேசு சொல்வதாவது "பர லோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானே யல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை" என்கிறார். பிறகு ஏன் தற்போதுள்ளக் கிருத்துவர் ஏசுவைக் கர்த்தர் என்றும் பிதா என்றும் சொல்லி வணங்குவதேன்? இது ஏசு சொன்ன சொல்லை மீறுவது அல்லவா ஏன்?

ஆபிரஹாம் காலத்தில் கர்த்தருடன் ஏற்பட்ட உடன்படிக்கையான விருத்தசேதனத்தை கர்த்தர் உத்தரவில்லாமல் கடைபிடிக்காமல் விட்டதேன்? ஏசுவிற்கு கூட விருத்தசேதனம் செய்தார்கள் என்பது உண்மை. கிருத்துவர்கள் இதை அறிவார்களா ? இதை இப்போதையக் கிருத்துவர் ஏன் இதைக் கடை பிடிக்கவில்லை? கர்த்தர் சொல்லை ஏன் மீறினார்கள்? இன்றும் ஏன் மீறுகிறார்கள்? விருத்தசேதனம் செய்ய வேண்டுவதில்லை என்று இயேசு சொன்னாரா ? சொல்லுங்கள் ! தற்போதுள்ள கிருத்துவர்களிடம் யார் சொல்லி அவர்கள் விருத்தசேதனத்தைக் கை விட்டார்கள்.

ஆமோஸ் அதிகாரம் 3 வசனம்-2 "அப்போது கர்த்தர் என்னை நோக்கி இஸ்ரேலுக்கு முடிவுகாலம் வந்தது. அவர்களை மன்னிக்க மாட்டேன்." என்றார். இதனால்தான் இஸ்ரேல்அரேபியா விலிருந்துத் இப்போது தனித்து போனதா? அங்கு இப்போதும் கிருத்தவர்கள் தானே வசிக்கிறார்கள். சுற்றிலும் கர்த்தரை அல்லா என்ற பெயரில் தொழும் முஸ்லீம்கள் சுன்னத்தைக் கைவிடாமல் தொடர்ந்து செய்துகொண்டு ஜோராக வாழ்கிறார்கள்.

தற்போது கர்த்தர் எனும் அல்லாவைத் தொழும் புதிய மதம் சுமார் ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன் தோன்றி இருந்தாலும் கூட அரேபிய மக்கள் சுன்னத்தை அப்போதிலிருந்தே தவிர்க்காது தொடர்ந்து செய்துகொண்டுத் தங்களை முஸ்லீம்கள் என்று அறிவித்துக் கொண்டார்கள். முஸ்லீம்கள் கர்த்தர் எனும் அல்லாவைத் தொழுது சுன்னத்தை செய்து கொள்கிறார்களே அவர்கள் பக்தி பெரியதுதா? இயேசு நான் கர்த்தர் இல்லை என்று அவரேச் சொன்ன பிறகும் வழி மாறி கிருத்துவை வணங்குபவர் பக்தி பெரியதா?

புதிய ஏற்பாட்டிலேயே பல பல இடங்களில் இயேசுவின் சீடர்கள் இயேசுவின் மரணத்தின் போது நடந்த சம்பவத்தை பலவிதமாகக் குறித்துள்ளார்கள். உதாரணத்திற்கு:

மத்தேயு அதிகாரம் 27 வசனம் 45-ல் : "ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமி எங்கும் அந்தகாசம் உண்டாயிற்று". வசனம் 46-ல் "ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு ஏலி ! ஏலி ! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என்தேவனே! என்தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்"

வசனம் 47-ல் "அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபோது இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். வசனம் 48-ல் உடனே அவர்களில் ஒருவன் ஓடி கடற் காளானை எடுத்து காடியில் தோய்த்து அதை ஒரு கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தான் வசனம் 49-ல் மற்றவர்களோ பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பாப்போம் என்றார்கள். வசனம் 50: இயேசு மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஆவியை விட்டார்".

யோவான் சுவிசேஷத்தி ல் அதிகாரம் 19-ல் வசனம் 27-28-ல் ஏசு தன் தாய் சீடர்களின் தாய் என்றும் இனிமேல் தன் தாய்க்கு சீடர்கள் மகன்கள் என்கிறார். பின் வசனம் 29-ல் ஏசுவுக்கு காடி கொடுக்கிறார்கள் வசனம் 30-ல் "ஏசு காடியை வாங்கினபின்பு முடிந்தது என்று சொல்லி, தலையை சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார்". இப்படி ஒன்றுக்கு ஒன்று முரணாக யோவான் சுவிசெஷத்திலும் ப இன்னும் சிலதிலும் "தேவனே என்னை ஏன் கை விட்டீர் என்றச்சொல் சொன்னதாக குறிப்பிடவில்லை. ஒரு சீடர் போல மற்றொரு சீடர் அப்படியே நடந்ததை எழுவார்கள் என்பது நிச்சயமில்லை. அதை ஒத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் அதில் கர்த்தாவுக்கும் ஏசுவுக்கும் நடந்தது என்ன என்பதை சற்று சிந்திக்க வேண்டும்.

இயேசு ஏன் கைவிடப்பட்டுக் கொலையுண்டார். கர்த்தர் ஏன் அவரைக் கை விட்டார். கைவிடப்பட்டதாக ஏசுவே சொல்கிறாரே. கடவுளின் குமாரனான இயேசு எண்ணக் குற்றம் செய்தார். யாரவது சொல்லுவார்களா? ஆத்ஹரத்துடன் இதுவரை யாரும் விளக்கியதாக வரலாறு கிடையாது.

ஆனால் தமிழரின் கடவுள்கள் அப்படியல்ல அன்பே சிவம். மதம் மாறுபவர்களை தண்டிப்பதில்லை. அதனால்தான் மதம் மாறியவர்கள் தமிழ்க் கடவுள்களைத் திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

பழைய ஏற்பாட்டில் II ராஜாக்கள் அதிகாரம் 2-ல் வசனம் 12-ல் அவர்கள் பேசிக்கொண்டு நடந்து போகையில் இதோ அக்னி ரதமும் அக்னிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது. எலியா சுழல் காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான். எலியாஎன்பவருக்கே தேவனாம் கர்த்தர் என்று அடுத்த வசனத்தில் சொல்லப் படுகிறது.தேவ குமாரன் எசுவானவர் கர்த்தரை கூப்பிடாது எலியாவை ஏன் கூப்பிட்டார். விளக்கம் எங்கும் இல்லை.

ஓசியா 13-ஆம் அதிகாரம் வசனம் 5-ல் கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன் யேகோவா எனபது அவர் நாமசங்கீர்த்தனம் என்று சொல்லப்படுகிறது. செனைகளைத்தவிர

முதலில் தாங்கள் சார்ந்துள்ள மதத்தைப் பற்றி படித்து வல்லவராய் மாறுங்கள், பிறகு பிற மதத்தை படியுங்கள், தேர்ச்சி பெறுங்கள். அதன் பிறகு போட்டி பேச வாருங்கள். அப்படி வல்லவவராய் வருபவர்கள் சவால் விடுங்கள். தங்களுக்கு பதில் சொல்லக் காத்திருக்கிறோம். மதங்களை பற்றி படிக்காத,தெரியாதவனிடம் வனிடம் திடீரென்று மோதாதீர்கள்.

எமது இந்து மதப்படி கொலை செய்யப் பட்டு மரணம் அடைந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள், அகாலமரண மடைந்தவர்கள் ,ஆயுட்காலம் இன்னும் முடியாது இறந்தவர்கள்தான் ஆவியாகவும் சாத்தானாகவும் மாறுவர் என்று முன்னமே அறிந்துள்ளார்கள். எங்களைக் கேட்டால் நல்ல விளக்கம் கொடுப்போம் எமது சைவ சமண மதத்தை முன்தழுவிப் பின் கிருத்தவர்கலானவர்களே!! மக்களே யார் சாத்தான்கள் என இன்னும் விளக்கமாக வேண்டுமா? விளக்கம் தரப் பலரும் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்.

யாத்ராகமம் 32-ம் அதிகாரத்தில் வசனம் 20-ல் வெறுங் கையேடு ஒருவனும் ஏன் சந்நிதியில் வரக்கூடாது. இப்போதெல்லாம் சர்ச்சுக்கு வெறும் கையோடுத்தாநேப் போகிறார்கள். ஏன்? விளக்கம் எங்காகிலும் பழையப் புதிய ஏற்பாட்டில் உண்டா சொல்லுங்கள் பார்ப்போம். .

யாத்ராகம் அதிகாரம் 3 வசனம் 10-ல் நீ இஸ்ரவேல் புத்திரராகிய ஏன் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்தில் அனுப்புவேன் வா என்றார்( மோசேவிடம் கர்த்தர் சொன்னது). வசனம் 20-ல் அப்போது மோசே தன் மனைவி (சிப்போராளை) யும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு எகிப்து தேசத்திற்கு திரும்பினான். தேவனுடைய கோலையும் மோசே தன் கையில் பிடித்துக் கொண்டு போனான். அடுத்த வசனத்திலேயே மீண்டும் கர்த்தர்...

வசனம் 21 மற்றும் 22 மற்றும் 23-ல் கர்த்தர் மோசேவிடம் அவன் பார்வோனிடம் பேச வேண்டியவைகளை சொல்கிறார். ஆனால் அதற்கு அடுத்த வசனத்திலேயே மோசே சிப்போரால் தம்பதிகளின் மகனைக் கொல்லப் பார்ப்பதேன்?

வசனம் 24-ல் வழியில் தங்குமிடத்தில் கர்த்தர் அவனுக்கு (மோசே வின் மகனுக்கு ) எதிர்ப்பட்டுஅவனைக் கொல்லப் பார்த்தார் (யாருக்கு எதிர்ப்பட்டு, யாரை எதற்குக் கொல்ல பார்த்தார். ஏன்? என்பதைக் காணோம்).
இதை ஏன் கர்த்தர் மோசேவிடம் கூறி விருத்தசேதனம் செய்யச் சொல்லவில்லை ? ஒரு கடவுள் தன்னை வணங்குபவனின் குழந்தையைக் கொல்ல சத்திரத்தில் காத்திருந்து கொல்ல அவருக்கு மனம் வருமா? உண்மையில் அவர் கடவுளா?

சிப்போராள் கர்த்தரென்று எப்படித் தெரிந்து கொண்டாள். கர்த்தரை எந்த உருவத்தில் பார்த்தாள்? அவருக்குத்தான் உருவம் கிடையாதே கர்த்தரை எப்படி அடையாளம் கண்டாள்? கர்த்தரின் நோக்கத்தை எப்படிக் கண்டு பிடித்தாள்? உருவத்தையும் கண்டாள் ஆனால் கர்த்தரின் நோக்கமான விருத்தசேதனம் செய்யாதத் தன குழந்தையைத் தான் கொல்ல வருகிறார் என்பதை எப்படி கண்டுகொண்டாள்.? இஸ்ரவேலர்கள் எகிப்த்திலிருந்து இரும்புக் கரத்தால் அழைத்து வந்தது 150-இடங்களுக்கு மேல் காணக் கிடைக்கும் போது, இதை ஏன் விளக்கவில்லை?

வசனம் 25-ல் "சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து தன்புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து நீர் எனக்கு ரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்".அப்படியானால் கர்த்தரின் நோக்கம் தோற்றுப் போனதே ஏன்?

வசனம் 26-ல்( கர்த்தர்) பின்பு அவர் அவளைவிட்டு விலகினார். புருஷன் மோசே அங்கு இருந்தானா ? இல்லையா? சிப்போராள் யாரைப் பார்த்து புருஷன் என்றாள். மோசே அங்கிருந்தானா? இல்லையா என்பதைக் காணோம். இவை முன்னுக்குப் பின் முரணாக உள்ளது

யாத்திராகமம்: அதிகாரம் 18 வசனம் 11-ல் "கர்த்தர் எல்லா தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர் என்பதை இப்போதறிந் திருக்கிறேன்." இதை மோசே சொன்னார். ஆனால் மோசேவுக்கு அவன் பிள்ளையை அடையாளம் தெரியாமலாக் கொல்லப் போனார்?

கர்த்தர் பைபிளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் தான் எகிப்திலிருந் இஸ்ரவேலர்களை மீட்டேன் ஆனால் அவர்கள் பாகால் என்ற மற்ற தெய்வங்களைத் தொழல் ஏன் என்று எரிச்சல் அடைகிறார். மனிதர்களின் மீது கடவுளுக்குப் பொறாமையுண்டா? விந்தையாய் இருக்கிறது. மேலும் அவர் என்னை வணங்கினால் நிலம் வாய்க்கால் வீடு வம்ச விருத்திகள் மற்றவரைத் தாக்கும் பலமெல்லாம் தருவேன் என்று ஆசை வார்த்தைகள் கூறுவதேன்?

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல ( வள்ளுவன் வாக்கிற்கு என்ன பதில்?)

இதில் கொடுக்கும் கடவுளே மதம் மாறியக் கிருத்துவர்களுக்கு வேண்டும் என்கிறார்களா? மேலுகம் வேண்டாமா? இயேசு கிறித்துவும் அவரைக் கர்த்தர் என்று கூறக்கூடாது என்றதை ஏன் பின் பற்றவில்லை? ஏன் மீறுகிறார்கள்? மீறுவதே இவர்களின் வாடிக்கையா ?

ரூபன், சிமியோன், காத், யூதா, இசக்கார், செபுலோன், யோசேபு, எப்ராயீம், மனசே, பென்யமின், தான், ஆசீர், நப்தலி, இவர்கள் யாகோபின் குமாரர்களா வார்கள்.

ஆதியாகமம்: அதிகாரம் 48 வசனம் 4-ல் யாகோபு தன் மூத்த மகன் ரூபனை நோக்கிச் சாகுந்தறுவாயில் ஆசீர்வாதம் செய்வதற்கு பதில் சாபம் கொடுக்கிறான். காரணம். ரூபன் தந்தை யாகோபின் வைப்பாட்டியான பிலாவுடன் சோரம் போனானாம். அந்த சாபம் பின்வருமாறு :-

"தண்ணீரைப் போலத் தளம்பினவனே நீ மேன்மை அடையமாட்டாய். உன் தகப்பனின் மஞ்சத்தின்மேல் ஏறினாய். நீ அதைத் தீட்டுப் படுத்தினாய். என் படுக்கையின் மேல் ஏறினானே."

மேலும் மூத்த மகன் ரூபன் கோத்திரத்தின் வரிசையிலிருந்து நீக்கப்பட்டான். ஆகையால் இப்போது 12-கோத்திரமே.
இதில் நம் தமிழக கிருத்துவர்கள் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவகளோத் தெரியவில்லை. அவர்களும் இதுநாள் வரையிலும் தாங்கள் எந்தக் கோத்திரமென்று ஏன் தெரிவிக்க வில்லை.

ஆரோன் வம்சத்தார் தான் ஆராதனை செய்ய வேண்டும் என்று கர்த்தர் பணித்தரே அதுபோல் ஏன் ஆரோன் வம்சத்திலிருந்து பாதிரிகளை தேர்வு செய்யப் படுவதில்லை?

ஆதியாகமம்: அதிகாரம் 19 வசனம் 13-ல் (கர்த்தர் உத்திரவு படி) நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள். லோத்தையும் அவனுடைய மனைவி இரண்டு மகள்களையும் கையைப் பிடித்து பட்டணத்திற்கு வெளியே விட்டார்கள் அப்படிச் சேதோமிலுள்ள மனுஷர்கள் எல்லோரையும் கர்த்தரின் ஆட்கள் கொலை செய்து போட்டார்கள்.

வசனம் 33-ல் "அப்படியே அன்று இரவிலே தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள் மூத்தாள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்".

வசனம் 34-ல் "மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து நேற்று ராத்திரி நான் தகப்பனோடு சயனித்தேன், இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம். நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடு சயனி என்றாள்".

வசனம் 35-ல் இளையக் குமாரத்தியும் அன்று ராத்திரி தன் தகப்பனோடு சயனித்து கருவுற்றாளாம். இந்தத் தவறுக்கெல்லாம் யார் பொறுப்பு ? மக்களா, கர்த்தரா, கர்த்தரின் ஆட்களா, சோறு போட்ட லோத்தாவா, அவன் மனைவியா, அவன் இரண்டு பெண்களா யார் காரணம்?

அகோலாள்(சுமேரியா), அகோலியால் (ஜெருசலேம்) என்று இருநாட்டினையும் அழகியப் பெண்களாக உருவகப் படுத்தி இவர்கள் மற்ற நாட்டினருடனும் அவர்களுடைய மதங்களைப் பின்பற்றி அவர்களுடன் உறவாடியதை நடத்தை கெட்ட வேசித்தனம் என்றும் வேசித்தனத்திற்க்காக கால்களை விரித்தார்கள் என்று கொச்சை படுத்தி பேசியுள்ளது பைபிளில் உள்ளது. மதம் மறுத்தல் வேசித்தனம் என்று கர்த்தர் சொல்கிறார். இங்கு இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் அவனவன் இஷ்டத்திற்கு மதம் மாறுகிறாரே இதைப்பற்றி அவர்கள் உணரவில்லையே அவர்கள் எதற்குச் சமமாம்?

இசக்கியேல் 16-ம் அதிகாரம் "வசனம்:25: நீ சகல வழி முகனையிலும் உன் உயர்ந்த மேடைகளைக் கட்டி உன் அழகை அருவறுப்பாக்கி வழிபோக்கர் யாவருக்கும், உன் கால்களை விரித்து உன் வேசித்தனங்களைத் திரளாய்ப் பெருகப்பண்ணி".

வசனம் 26 "சதை பெருத்த உன் அயல் தேசத்தாராகிய எகிப்தியப் புத்திரரோடே வேசித்தனம் பண்ணி எனக்கு கோபம் உண்டாக்கும்படி உன் வேசித்தங்ககளைப் பெருக்கப் பண்ணினாய்".

இவ்வளவு நாளும் இந்துக்கள் பைபிளில் இந்துசமயங்களில் கடைபிடிக்கும் ஒற்றுமைகளை மட்டும் எடுத்து கொண்டிருந்தார்கள். ஒருவர் இந்துக் கடவுள்கள் சாத்தான் என்றதால்தான் பைபிளில் உள்ள ஒவ்வாமையை இங்குப் பேச நேர்ந்தது.

இதைப்போல அதிகாரத்திற் கதிகாரம் பலவற்றைச் சுட்டிக்காட்டி அடுக்கிக்கொண்டேப் போகலாம். ஆனால் மற்றவர்களின் மதங்களை தாக்குவது பண்பாடில்லை.

முன்புத் தமிழனாய், இந்துவாய், இந்து கடவுளைத் தொழுதவன், சுயலாபத்திற்கு மதம் மாறியவன் இந்துக் கடவுள்களைச் சாத்தான் என்று பேசியதற்காகவே இவ்வளவு மாறுபட்ட வேற்றுமைகளை எழுத நேர்ந்தது. பைபிளில் இந்துக்களோடு ஒத்துப்போகும் ஒற்றுமைகளைக் கூட மதம் மாறிகள் அறிய மாட்டார்கள். காரணம் படிப்பது அவர்களுக்குப் பிடிக்காத ஒன்று. அவற்றை அவர்களேப் படித்துக் கண்டு பிடிக்கட்டும். தமிழர்கள் எல்லா மதத்தையும் மதிப்பவர்கள், மரியாதை செய்பவர்கள், வரவேற்பவர்கள், இந்துக்கள், அவர்களில் சிலர் மதம் மாறியப்பின் அதைக் கண்டுகொள்ளா விட்டவர்கள் என்பதைப் பிற மதம் மாறிகள் தெரிந்து கொள்ளவேண்டும்.

இந்துமதம் உங்கள் முன்மதம். நீங்கள் தழுவிப் படர உங்களை வளர்த்துவிட்ட ஆலமரம் எனபதை மறந்துவிடாதீர். எமது முன் சொந்தமக்களே அறியவேண்டும் !!!


– ராஜ பழம் நீ
(12 Nov 2018)

எழுதியவர் : பழனி ராஜன் (12-Nov-18, 6:42 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 671

மேலே