வலி💘💔💔💘

ஒத்தையில என் உலகம்
என்றாச்சு
என்னைசுத்தி என்ன என்னமோ
பேச்சு..
மனதை துளைக்குதே...
உயிர் வலிக்குதே...
பாசம் என்றும்
நேசம் என்றும்
வாழ்ந்த வாழ்வு எல்லாம் பொய்யோ jQuery17109268393807950663_1641031827649

பாவங்கள் பல செய்ய
பிறந்தேனோ??
பாசம் அது தீண்டாமல்
வளர்ந்தேனோ ??
பைத்தியம் இவன் என
சிலர் சொல்ல
பாசம் வைத்து
பைத்தியம் ஆனேனோ??!!

என்னோடு விதியது
விளையாடுது ..,
கண்ணீரோடு
பேசி பேசியே
காலம் போகுது ..,
அன்பு என நம்பி
ஏமாந்து ஏமாந்து
மனமும் மரத்துப் போனதோ??.,

(ஒத்தையில...)

இறை அது வெறும்
சிலைதானோ..?
வலி அது வாழ்வின்
விலைதானோ..?
எல்லாம் இங்கு மாய
நிலைதானோ ?? !!

ராகு காலத்தில்
பிறந்தேனோ??
சனி அவனோடு
வளர்ந்தேனோ ??
குருபார்வை இன்றி
இங்கு திரிந்தேனோ.??
கேது அது பார்க்க
மண்ணில் வீழ்ந்தேனோ ..??

(ஒத்தையில...)

பூவி மீது செய்த பாவம்
எல்லாம் இவன் போக்க
பாவி இன்னும்
எத்தனை காலம்தான்
தண்டிப்பானோ
எமன் இவனை அழைக்க!!!

அவனை நோக்கி இவன் …

என்றும் ...என்றென்றும்
ஜீவன் ✊✊

எழுதியவர் : ஜீவன்..✊✊ (21-Nov-18, 12:41 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 624

மேலே