குழந்தை

குழந்தை
இமைக்காமல் பார்க்க வைக்கும் இன்பநிலா
இதயத்தில் சுகம் சேர்க்கும் இனியபலா

பொம்மைக்கும் உயிர் கொடுக்கும் இளையபிரம்மா
பொன்னையும் தோற்கச் செய்யும் இன்பவரமா

உறங்குகையில் இறைவனையே உரித்து வைக்கும்
உலகத்தின் இயக்கத்தின் வேராய் நிற்கும்

வாழ்வினில் வண்ணம் தரும் வானவில்
வளமில்லை குழந்தை இன்றி பூமியில்

குறையாமல் வளர்ந்து வரும் வளர்பிறை
குவலயத்தை காத்து நிற்கும் நான்மறை

எல்லோர்க்கும் கிடைக்குமா இந்த பெரும்வரம் – இது
இல்லையெனில் வாழ்க்கை வெறும் பாலைவனம்

சொ. பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (21-Nov-18, 5:18 am)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
Tanglish : kuzhanthai
பார்வை : 55

மேலே