நாலடியார் - 1 கடவுள் வாழ்த்து

நாலடியார் - தொடர்.
தமிழ் இலக்கியங்களில் சிறப்பான நூலாக கருதப்படும் நாலடியார் பற்றி அறிந்துகொள்ள உதவும்
இதனை காணொளியை யூடுபே இணைய தளத்தில் காண
https://youtu.be/DXRPoL1vOw0

1 . கடவுள் வாழ்த்து

வான் இடு வில்லின் வரவு அறியாவாய்மையால்,
கால் நிலம் தோயாக் கடவுளை,யாம் நிலம்
சென்னி உற வணங்கிச் சேர்தும்- 'எம்உள்ளத்து
முன்னியவை முடிக!' என்று.

பொருள்.) மேகத்தால் உண்டாகின்ற இந்திரவில்லைப்போல, பிறப்பின் வருகையை அறிந்துகொள்ளக்கூடாத உண்மையினால், எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி, திருவடிகள் நிலத்தில் படிதலில்லாத அருட்கோல இறைவனை, தரையில் எமது முடி பொருந்தும்படி தொழுது, இடைவிடாது உள்ளுவோம்.

(கருத்து.) பிறப்பின் தோற்றம் முதலியவற்றை நாம் முழுதுந் தெரிந்துகொள்ளக் கூடாமையால், விரும்பும் நலங்களின் பொருட்டு இறைவனைத் தொழுது அடைக்கலமாவோம்.

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (30-Nov-18, 7:11 pm)
பார்வை : 165

மேலே