சக்தி தாசன்
உமது படைப்புகளின்..
தேச விடுதலை வேண்டிய வரிகளில்
தேகத்தினுள் எரிதழல் காட்டம் உணர்ந்தோம்...
காதல் நயம் சொட்டும் இடங்களில்
அன்பு இலக்கணம் கண்டு
அகமகிழ்ந்தோம்....
இறைவியிடம் வரம் தேடிய வரிகளில்
உள்ளத்து உணர்வும்
உயிரின் அறிவுமே
தெய்வம்-என
உணர்ந்தோம்....
இனியவை நாற்பது என்றில்லாமல்
இவ்வுலகம் இனிது- என்கையில்
அயர்வு நீங்கீ துணிவு
கொண்டோம்...
முண்டாசு புலவனே
செம்மொழி போல்-என்றும்
இளமைத் தோற்றத்துடன்
உம்மை காணப்பெற்றமை
எமக்கு
வரமா?
சாபமா?