பிணமாகும் நேரத்திலும்

தினந்தோறும் மனம் வருந்தி
கனம்தோறும் பணம் தேடி
நிலை தோறும் ஆற்றல் இழந்து
பணியோடே படிந்துக் கொண்டு
நிலையின்றி நீங்கி விடுவேன் என நினைத்தாயோ
அறமான சிந்தனை ஒன்றே
வரமாக பெற்று வந்த
தெளிவான தலைவன் பால்
நிலையான ஆட்சித்தனை
கொடையாக கிடைக்கச்செய்ய வழியாக இருப்பேனின்றி
பிணமாகும் நேரத்திலும்
பிழையான செயல்களெல்லாம்
அழிவான பாதை செல்ல
எளிதான வழியைக் காட்டி
தணியாத எண்ணம் கொண்டு
செழிப்பான செய்கை செய்து நெடிந்து வளர்வேன் நானே
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (11-Dec-18, 3:17 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 77

மேலே