துடியிடையாள்
ஐயோ அழகு தேவதை
பைய நடந்து வந்தாளே
நெய்யில் வார்த்தெடுத்ததைப் போல்
நிறைந்த வாசம் தந்தாளே
அசந்து நானும் பார்க்கையிலே
அழகாய் கண்ணடித்தாளே
பறந்து போன கிளியெல்லாம்
கிறங்சி கீழ வந்ததே
அழகால் ஆன பெண்ணவள்
அதற்கு பாடம் சொன்னாளே
அவளின் குரலைக் கேட்டுத்தான்
குயிலும் கிறுகிறுத்ததே
எழிலாள் நடந்து செல்கையில்
மயிலும் மிரண்டு போனதே
துணிந்து நானும் சென்று தான்
துடியிடையாளை அணைக்க போகின்றேன்
தூரவுள்ள அனைத்து நண்பர்களும்
துணைக்கு கூட வருவீரோ!
…..நன்னாடன்