காதல்
காலம் செய்யும் கோலம் கண்டு
கலங்கிடாதடி நீ கண்ணம்மா
காலம் அறியாது நம் காதலுக்கு
ஏதடி மூப்பு , காதல் அன்பின் பரிமாற்றம்
கண்ணம்மா அது இளமையில் வெறும் காயாய்
இருந்து மூப்பில் நம்மை வாழவைக்கும்
அவ்வையின் அருங்கனி நெல்லிப்பழம்போல.
மோகமும் காமமும் காலத்தால் அழிந்திடும்
நம் காதலோ நம் உயிருக்கும் உயிராய்
வாழ்ந்திடும் உணர்வடி கண்ணம்மா