சிருஷ்டி -என் அறிவுக்கு எட்டிய ரஹஸ்யம்
பட்டாசு, தரை சக்கரம்
கொளுத்தி விட்டவன் ஒருவன்
தரையில் சுழலுகின்றது
சுழலும் ஓர் அண்டம்போல
வானில் சுழலும் அண்டங்கள்
இவற்றை சுழலவிட்டவன் யாரோ
சுழலும் தரைச்சக்கரத்திற்கு
சுழலும் காலவரை உண்டு
அதுபோல் அங்கு வானில் சுழலும்
அண்டங்கள், நட்சத்திரங்கள், கோள்கள்
இவற்றிற்கும் சுழலும் காலவரை உண்டு
மண்ணில் ஒருவன் செய்தது பட்டாசு
அதை விட்டு வேடிக்கைப்பார்ப்பவர் உண்டு
விட்டால் அன்றி சுழலாது பட்டாசு
அதுபோல அண்டங்களை எல்லாம் படைத்து
சுழலவிட்டு, காலஅவகாசம் தந்து வேடிக்கை
பார்ப்பவனும் உண்டல்லவா ...............?
குளத்து நீரில் சிறுவன் ஒருவன்
அடித்த கல் நீர்மேல் பட்டு தெறிக்கிறது
நீரின் மேல் ஓர் சூழல் அண்டம் பிம்பமாகிறது
பிம்பம் வந்தது எவ்வாறு ............?
அதற்கொரு கர்த்தா....... அவனே அச்சிறுவன்
அதுபோல், இவ்வுலகில் நாம் காணும்
இயற்கை அத்தனைக்கும் பின்னால்
சிருஷ்டிகர்த்தா ஒருவன் இருத்தல் வேண்டும்
அது யார் என்பது அவரவர் யூகம் !