எழுதுகோல் பணி

எழுதுகோல்
புது மை கொண்டு
சமூகத்தில் புதுமை படைக்கும்

எழுதுகோல்
கூன் விழுந்த நாட்டை
நிமிர்ந்து நடக்க வைக்க
எழுந்த கோல்
பத்தாம் அவதாரம் எடுத்து
சூரியனிடமிருந்து
வீரியன் கையில்
விழுந்த கோள்

அது கரு மை கொண்டு
தியாகியின் பெருமையோடு
ஏழையின் வறுமையும்
சொல்லும்

வரி மூலம் வரி விதிப்போரை
கட்டுக்குள் வைக்கும்

தன் தலை குனிந்து
நம் தலை நிமிரவைக்கும்
பெண் விடுதலை பெற
தாளின் மூலம் விடும் தலை

தமிழே நீ
வள்ளுவரின் எழுத்தாணி
பாரதியின் எழுத்தாணி
சேர்ந்து எழுதிய எழுத்துதான் நீ

பேனா மை
பெண்ணுரிமை மண் உரிமை
பேனா மை
நாட்டிற்கு ஆபத்து

பனி படர்ந்த சமுதாயக்
கண்ணாடியைத் துடைத்து
பிணி நீக்குவதே எழுதுகோலின் பணி

புதுவைக் குமார்
31 யமுனை வீதி
வசந்தம் நகர்
புதுவை - ௬௦௫௧௧௦
9942994112

எழுதியவர் : குமார் (25-Dec-18, 10:09 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : ezhuthukol panay
பார்வை : 160

மேலே