நீ எனக்கு போதி மரம்

நண்பா,
வயதாறிலிருந்து நீ எனக்கு போதி மரம்
நீ அருகில் இருந்ததே எனக்கு சிறந்த வரம்
நான் படித்து முடித்து நெடிது வளர
படியாய் மாறி குடையாய் இருந்து
பெரும் படையாய் தாங்கிய கொடையே
விலகவே முடியாத தசையே - வெண்
கதிருக்கு இணையான சுடரே
தலைக்கனமே இல்லாத அறிவே - இத்
தரணி உள்ளவரை நீ தான் என் தலைவன்.
…. நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (26-Dec-18, 7:35 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 572

மேலே