காதலடா

நெஞ்சோடு கலந்த
உன்னை நஞ்சோடு
பால் அருந்தினாலும்
மறக்க முடியுமா ?

உயிரோடு
கலந்த உன்னை
உதறிய பின்னும்
வெறுக்க முடியுமா?

மஞ்சத்திலே கொஞ்சிட
நினைத்த உன்னை
பஞ்சோடு போட்டு
எரித்தாலும்
பிரிக்கத் தான் முடியுமா?

உள்ளத்தால் வாழ்ந்தேன்
நீ உதட்டோடு
முடித்துக் கொண்டாய்
உயிரற்றுப் போனது என் காதலடா?

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (30-Dec-18, 11:14 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 79

மேலே