காதலடா

நெஞ்சோடு கலந்த
உன்னை நஞ்சோடு
பால் அருந்தினாலும்
மறக்க முடியுமா ?
உயிரோடு
கலந்த உன்னை
உதறிய பின்னும்
வெறுக்க முடியுமா?
மஞ்சத்திலே கொஞ்சிட
நினைத்த உன்னை
பஞ்சோடு போட்டு
எரித்தாலும்
பிரிக்கத் தான் முடியுமா?
உள்ளத்தால் வாழ்ந்தேன்
நீ உதட்டோடு
முடித்துக் கொண்டாய்
உயிரற்றுப் போனது என் காதலடா?