காதல்

நேற்றைய காதலராய்
பிரிந்து வாழ்ந்திருந்த
நம் இருவரையும்
சேர்த்துவைத்து ........
இதோ இந்த ரோசாப்பூ செண்டு?
விரிந்த செவ்விதழ்களில்
மயக்கும் மணம்பரப்பி
ஊடலில் மனம் வெதும்பி
உன் மீது கோபம்கொண்டிருந்த
என் இதத்தை ஊடுருவி
உன்மீது நான் கொண்ட கோபத்தை
வேரோடறுத்து பரிவால் நிரப்பியது
ஊடலையும் சாய்த்து, மாய்த்து,
மீண்டும் நம்மை காதலராய் சேர்த்து,
இந்த நீ எனக்கென்று தூதனுப்பிய
ரோசா செண்டு .....இது செண்டல்லவே
நம் இருவரையும் சேர்த்துவைத்த
ஓர் பெரும் மலர் தூதுவனல்லவோ ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jan-19, 9:45 pm)
Tanglish : kaadhal
பார்வை : 297

மேலே