நம்பிக்கை சிறுகதை

மிகப் பெரிய கட்டிடம் கட்டிக் கொண்டிருந்த வேளையில்
வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூலி ஆள்
தவறுதலாக கீழே விழுகின்றான், கூட நின்றவர்கள் சத்தம் போட்டு கத்தினார்
ஆனாலும் அவன் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவன் என்பது எல்லோரும் அறிந்திருந்தனர் ,
விழும்போது அவன் அந்தோனியாரே என்னைக் காப்பாற்று
என்று கத்தினான்
அவன் கத்திய சத்தம் புனித அந்தோனியார் காதில் கேட்டு அண்ணார்ந்து பார்த்து அங்கேயே நில் என்று கையை காட்டினார் , உடனே அவன் அந்த இடத்தில் அந்தரத்திலே நின்று விட்டான்
என்ன அற்புதம்/ புனித அந்தோனியார் அவனைக் காப்பாற்றி விட்டார் எல்லோரும் ஆச்சரிய பட்டனர்,
கடவுளுக்கு நன்றி சொல்லினர், பின் அந்தரத்தில் நிற்கும் அவனை பக்குவமாக கீழே இறக்கினர் . இந்த அற்புதம் உலகமெங்கும் பரவியது , கடவுளை நம்பினோர் கைவிடப் படமாட்டார்.

எழுதியவர் : பாத்திமாமலர் (17-Jan-19, 11:31 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 737

மேலே