இன்பங்கள் காணவே

ஆனந்தம் வந்தது அன்பாலே - நல்
ஆரோக்கியம் கெட்டது துர் மனதாலே
ஊறுகின்ற சுனை போல் உள்மனது
பரிமாற காத்திருக்கு பல்சுவையை

உடலை ஆளுகின்ற ஆழ்மனதின் ஆளுமைக்கு
உடன்பட்டு வாழ்ந்தால் துன்பமில்லை - வெளி மனதின்
ஒவ்வாத நிலைக்கு உட்பட்டால்
ஒவ்வொரு நாளும் பெருந்துன்பம்

அருமை மிகு சிறப்பான இப்பிறப்பு - இந்த
அகிலத்தின் தலையாய பெரும் சிறப்பு-பெரும்
இன்பங்கள் காணவே பிறந்து வந்தோம்- அதற்கு
பொறுமையுடன் நாமும் முயற்சி செய்வோம்
-- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (20-Jan-19, 8:52 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : inbangal kaanave
பார்வை : 285

மேலே