கீதா வெண்பா கர்மயோகம்

---------------அருச்சுனன் வினா--------------------
1 .
கண்ணாகர் மத்தினும் ஞானம்மேல் அன்றோ
எனினும்நீ என்னை கொடும்வினை யாற்றுதலில்
முன்னெடுத்து செல்வதே னோ ?

2 .
முரண்படு சொல்லால் குழப்பு கிறாய்எனை
நான்மேன்மை பெற்றிட ஏதாவ தொன்றை
உறுதியாய் நீஉரைப் பாய் !

-------------------கண்ணன் உரைத்தது--------------------------
3 .
பாவமற்ற பார்த்த இரண்டு எனஅறிநீ
ஞானம்ஆய் வோனுக்கும் ஆற்றுவோ னுக்கோ
வினைஎனநான் முன்னமேசொன் னேன் !

------தொடரும்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jan-19, 4:27 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே