நடமாடும் ஓவியம்

படைப்பு உலக
பிரம்மாவின்

ஓவிய கண்காட்சி

கைவண்ணத்தை
வியந்தபடி

கற்பனை அளவை
ரசித்தபடி நகர

என்எதிரே ஒரு
ஓவியம்

நகர்வது கண்டு

நடமாடும் ஓவியமா
என திகைக்க

கண்காட்சி
கண்களுக்குள்

காணமல் போச்சி

நான் மட்டுமா
திகைப்பில்

என சுற்றிலும்
பார்க்க

பலரின் கண்கள்

பலாபழத்தில்
மொய்க்கும் ஈக்களாய்

வெம்மையில் என்
மனம்

மற்றவர் பார்ப்பதைக்
கண்டு

எதுபற்றியும் கவலை
கொள்ளாது

அசைந்தாடும் தேராய்
அவள்

ஆச்சர்யம் அலைமோத
அந்த

நகரும் ஓவியத்தையே
பார்த்திருக்க

என் போராட்டங்களை
அறியாது

கடந்துவிட்டாள் எளிதாய்
என்னை

நான் மட்டும் அவள்
பின்னால்

அவளை ரசித்தபடி

எழுதியவர் : நா.சேகர் (4-Feb-19, 10:05 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : nadamaadum oviyam
பார்வை : 2287

மேலே