காதல்
அகண்டு விரிந்த மலர்விழியாள்
அவள் கண்களுக்கு மை இட்டு
நிலைக்கண்ணாடியில் அழகு பார்க்க
என்னவள் கண்ணழகை அவள் பின்னே
இருந்து ரசித்த நான் அவளிடம் சொன்னேன்
'பெண்ணே , மை இட்டதால் உன் கண்களுக்கு
அழகா, இல்லை உந்தன் கண்ணழகால்
மை மெருகேரியாதா ' என்று நினைக்கையில்
நான் சொல்வேன் உந்தன் கண்ணழகால்
மைதான் மெய்யாலும் அழகானது