கருத்திட்டு செல்

நான் எழுதிய கவிதை
பார்த்தாயா படித்தாயா..?

நூறுபேரில் நீயும் ஒருத்தி
என்று நினைத்து கொள்கிறேன்.!

நன்றாக இல்லை
என்றாவது சொல்

ஊமையாய் நீ
ஆமையாய் நான்.!

யாரோ போலாவது
கருத்திட்டு செல்
கருவூலம் போல் அதை
பாதுகாத்து வைப்பேன்..!

தொன்னூற்றி ஒன்பதும்
செய்யவில்லை....
நீயாவது செய்
நிம்மதியாகும் மெய்..!!

எழுதியவர் : ஷெரிப் (6-Feb-19, 8:24 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 593

மேலே