அனுபவம் பேசுதுப்பா

தன்னை போல் வாழ்வதற்கான வழிகள் (வலிகள்) குறைவே..,
மற்றவர்கள் போல் வாழவேண்டும் என்பதற்கான வழிகள் (வலிகள்) தான் அதிகம்...!

அடுத்தவர் மீது கொள்ளும் ஆதங்கம் அள்ளித் தரப்போவதுமில்லை.., அடுத்தவர் முதுகின் பின்னால் செய்யும் கேலி கிள்ளித் தரப்போவதுமில்லை...!

சகதியோ சந்தனமோ எதை யார்மேல் பூச வேண்டும் என்பதை முடிவு செய்வது கடவுளும் கர்மமுமே...!

நீயோ நானோ அல்ல...!

-------சரண்யா விஜயகுமார்.

எழுதியவர் : சரண்யா விஜயகுமார் (22-Jan-19, 3:54 pm)
சேர்த்தது : Saranyavijay
பார்வை : 628

மேலே