என்னவளின் மூச்சுக்காற்று

என்னவளின் மூச்சுக்காற்று!

மரணம் ஏற்கும் தருவாயில் உயிரை தரும் இசையெனவே,

மார்புக்குழியில் உள் நுழைந்து,

என் மனம் மயக்கும் உன் மூச்சுக்காற்றாடி..

காற்றை கொஞ்சம் கடன் வாங்கி துளையிடை வழியே ஓசை எழுப்பும் குழலே,

இதய துடிப்பை இசையாக்கி இன்னிசை மீட்டும் என்னவளின் மூச்சுக்காற்றை கேட்டாயோ,

உந்தன் துளையிடை உருவாக்கும் இசையும்,

என்னவளின் மூச்சுக்கு ஆயுள் அடிமை அதை நீயும் அறிவாயோ!..

-சைரா.

எழுதியவர் : சைரா (15-Mar-19, 4:56 pm)
சேர்த்தது : சைரா
பார்வை : 261

மேலே