காதல் கற்பனைகள் -1

பதினெட்டு வருடங்களுக்கு முன் எழுதிய கவிதைகள் சில இன்று கண்ணில் பட்டது . 12 ம் வகுப்பு விடுமுறையில் , கவிதை எழுதி பழகி கொண்டிருக்கும் பொழுது எழுதியவை . முதன் முதலில் கவிதை எழுதும் ஒருவனுக்கு காதலை தவிர வேறு என்ன எழுத தோன்றும் ? எழுதியது அனைத்தும் காதல் கவிதைகளே . ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்ததால் அனைத்தும் வெறும் கற்பனையே . நமது வாழ்வில் தான் காதல் என்ற அசம்பாவிதம் நடக்கவே இல்லையே . காதலர் தினம் அருகில் வருவதால் சரியாக இருக்கும் என மறுபடியும் , கந்தலாகி போன காகிதங்களில் இருந்து .


இதய வானின்
உடைய நிலாவே
நிதமும் சந்திக்கிறோம்
பேசிப் பிரிக்கிறோம்
காதலை சொல்லாமலே !

இயல்பாக காட்டிக்
கொண்டாலும்
நீ எனது
உடலின் ஒரு
பகுதியாய்
மாறிப் போனதை
அறிவாயா ?

அருகில் வரும்போதும்
விகல்பமின்றி தொடும்போதும்
சிறப்புகளை பாராட்டும்போதும்
தவறுகளை கூறும்போதும்
செல்லமாக அடிக்கும்போதும்
என்னவாயிற்று
அமைதியாய் இருக்கிறாய்
என்கிறாய் ?

எப்படி சொல்வது
நினைவுச் சூழலால்
தடுமாறி
நிற்கிறேன்
என்பதை ?

என்ன வாங்கினாலும்
பிடித்திருக்கிறதா
என் என்னை
கேட்டு வாங்குகிறாய்?

எனக்கு பிடித்த
உன்னை நான்
வாங்குவது
எங்கனம் !

உடைகள் விஷயத்தில்
தினமும்
எனது கருத்தை
கேட்கும் நீ
உடமையாக்கிக் கொள்ள
ஒத்துக்கொள்வாயா ?

காதலுக்கும் நட்புக்கும்
ஒரு நூல்
அளவே
இடைவெளி
நான் தாண்டிவிட்டேன்
நீ ??

-பாவி

எழுதியவர் : பாவி (8-Feb-19, 9:31 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 188

மேலே