என் பாதையில்
என் பாதையில் வலியும் வேதனையும் இருளாய் சூழ்ந்தாலும்.
சொந்தம் எங்கே பந்தம் எங்கே என்று இருவிழிகள் பிதுங்கினாலும்.
பயணம் முடிந்தது என்று கலங்கி மனம் உடைந்தாலும்.
உற்சாகமாய் பயணிக்கிறேன்!
ஏனென்றால்! கலங்கரை விளக்கமாய் என் நண்பன் அருகில் இருப்பதால்.