முயல்

முயல்
=======
நேற்று முடிந்தகதை நீயதை நெஞ்சேந்தி
மாற்றிடச் சொன்னால் முடியுமா? – தூற்றிடும்
வேளைக்கு காற்றைபின் வீசென்றால் வீசுமா?
நாளையை விட்டின்றை நம்பு.
**
வேளை வரும்போது விட்டுவிட்டு மீண்டுமது
நாளை வருமென்று நம்பியே – மூளை
கசக்கிநின்றால் முன்னேற்றம் கைவரு மாமோ?
வசமாக்கு இன்றே வரம்.
**
முன்னேற உன்னால் முடிந்ததைச் செய்யின்று.
பின்விளை வெல்லாம் பிறகுபார். – தன்னம்பிக்
கைக்கொள்வாய். வெற்றியுன் கைசேரும். மூடநம்பிக்
கைக்கொள்ளா தேநீ முயல்.
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (11-Feb-19, 2:52 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 385

மேலே