இவை யாவும் வேண்டும்

-------------------------------------------
பிறர் வலி காணா கண் வேண்டும்
வசையில்லா ஒலி கேட்கும் செவி வேண்டும்
நன்மை நவிலும் நா வேண்டும்
நட்பின் கண்ணீர் துடைக்கும் கைகள் வேண்டும்
நம் மனச்சுமைத் தாங்க ஓர்
தோள்வேண்டும
நாம் சாயும் தோள் நம்மை
ஆற்றுவிக்க வேண்டும்.
வாடிய பயிரை கண்டால்
வாடும் நல் இதயம் வேண்டும்
சுவாசிக்க மாசில்லா
காற்று வேண்டும்
கவலைகள் என்னைத்
தின்னதகா நிலை வேண்டும்
தலைவனைத் தேர்தெடுக்கும்
திறன் வேண்டும் அவன்
நாட்டின் நலம் காக்க வேண்டும்
ஆண்டவனை வழிப்பட
ஆலயம் செல்ல வேண்டும்
செல்வதற்குத் திடமான
கால்கள் வேண்டும்
வழிப்பட்ட ஆண்டவன்நல்
வழி காட்ட வேண்டும்
வலி இல்லா மரணம்
வேண்டும்
இவை யாவும் நல்குவதில்
தடையும்உள்ளதோ
என்னை ஆளும்
லோக மாதா புவனேஸ்வரியே !

எழுதியவர் : சாந்தா வெங்கட் (13-Feb-19, 2:25 pm)
சேர்த்தது : சாந்தா
Tanglish : ivai yaavum vENtum
பார்வை : 138

மேலே