துயரம்

துயரம்
தேசத்தின் துயர் தனையே
தோளில் ஏற்றுக்கொள்வோம்
அநியாய பலிகளாய்
இராணுவத்து வீர்ர்கள்
அவர்களும் மனிதர்கள்தான்
ஒவ்வொருவர் மனதுக்குள்ளும்
எத்தனை எத்தனை கனவுகள் !
கொத்து கொத்தாய்
அத்தனையும் கருகிபோய்
காய்ந்து கிடந்த உடல்களாய் !
எத்தனையோ கொள்கைகள்
எத்தனையோ வேறுபாடுகள் 1
ஒவ்வொன்றுக்கும்
உயிர் பலி கேட்பதால்
தேவைகள் முற்று பெறுமா?
தன்னை வருத்தி போராடி
வெற்றி பெற்ற நாடல்லவா
நம் நாடு !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (16-Feb-19, 10:49 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : thuyaram
பார்வை : 109

மேலே