காதல்

தேர்ந்தெடுத்த தீந்தமிழ்
வார்த்தைகளால் தொடுத்த
பாமாலையால் உனக்குருவம்
தந்தேனடி,அதைக்கண்டும்
திருப்திகொளா என்மனமோ
உன்னழகை ,தங்கம்,தாமிரம்
வெள்ளி ஆதி ஐம்பொன்கலவையை
உருக்கி அதை தட்டி தட்டி
உன்னழகை வார்த்திட ஆசை
இந்த கவிஞனுக்கு , ஆனால் பெண்ணே
அப்படியே நான் உனக்கொரு உரு தந்தாலும்
உன்னழகை அப்படியே உருவேத்தி
நான்முகனை வேண்டி வேள்வி புரிவேன்
ஒற்றைக்காலில் நின்று அந்த உன் உருவம்
ஐம்பொன் பதுமை உயிர்ப்பெற்றேழுந்து வந்து
என்மேல் காதல்கொள்ள

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Feb-19, 2:36 pm)
Tanglish : kaadhal
பார்வை : 109

மேலே