காதல்

பூந்தோட்டத்தில் பூத்துக் குலுங்கும்
பூக்கள் ஒவ்வொன்றும்
வாசத்தால், நிறத்தால் உருவத்தால்
கண்ணுக்கு அழகு ,சோலையிலே
பச்சை மரங்கள் ஒவ்வொன்றும்
கண்ணுக்கு விருந்து கோவிலில்
உயர்ந்த ராஜகோபுரம் கண்ணுக்கு ரம்மியம்
கடலின் ஆர்ப்பரிக்கும் அலைகள் அழகு
நதியின் நீரோட்டம் கண்ணுக்கு அழகு
பெண்ணே உன்னில் உச்சிமுதல்
பாதம் வரை ஒவ்வோர் அங்கமும்
அழகோ அழகு நீ ஆடிவரும் தங்க ரதம்
திருவாரூர் தேர் அழகு என்பார்
என் கண்ணிற்கு தேரே நீ அலகிற்கழகு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Feb-19, 7:40 pm)
Tanglish : kaadhal
பார்வை : 159

மேலே