எழுத்து

கேட்கும் ஒலியின்
துணையால் மனிதன்
பாஷையைப் படைத்தான்
என்பார் பகுத்தறிவாளர்
சரி.பின் எழுத்து பாஷைக்கு
வந்தமைந்தது எப்படி ……..
என்றால் அதற்கவரிடம்
எது பதில்.பதில் தந்தாள்
கவிதாயினி ஒளவைப்பிராட்டி
.எழுத்தறிவித்தவன் இறைவனாகும்
ஓசையில் உள்ளான் இறைவன்
ஒளியில் உள்ளான் எங்கும் உள்ளான்
.அவன் எதிலும் உள்ளான்
ஒலியின் வடிவாய் எழுத்தாயும்
இருப்பவனும் அவனே என்றறி மனமே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Feb-19, 5:31 pm)
Tanglish : eluthu
பார்வை : 105

மேலே