என்னவென்பது

#என்னவென்பது..?

திரு நங்கை பற்றி எழுதினால், திருநங்கையாக இருப்பாளோ..?

தாசியைப்பற்றி எழுதினால் தாசியாக இருப்பாளோ..?

விதவை பற்றி எழுதினால்
விதவையாக இருப்பாளோ..?

ஏமாற்றப்பட்டு கருதரித்தவளை பற்றி எழுதினால்
யாரிடமோ ஏமாந்திருக்கிறாளோ..?

காதலைப்பற்றி எழுதினால்
கள்ளக் காதலோ..?

அரசியல் பற்றி எழுதினால்
அரசியல்வாதியோ..?

என்றெல்லாம்
சோடனை செய்து பார்ப்பவர்கள்

ஜான்சி ராணியைப்பற்றி எழுதினால்
ஜான்சிராணியாகவோ
வேலுநாச்சியைப்பற்றி எழுதினால்
வேலுநாச்சியாகவோ
சமூகத்தை எழுதினால்
சமூகநலவாதியாகவோ
நினைப்பதற்கு மட்டும்
இடம் கொடுப்பதேயில்லை
சுயமே சிந்தனையானவர்களுக்கு…!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (21-Feb-19, 8:40 pm)
Tanglish : yennavenbathu
பார்வை : 58

மேலே