இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில் புலிகிடந்த தூறு – மூதுரை 21

நேரிசை வெண்பா

இல்லாள் அகத்திருக்க இல்லாத(து) ஓன்றில்லை
இல்லாளும் இல்லாளே யாமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும். 21 - மூதுரை

பொருளுரை:

நற்குண நற்செய்கைகளை உடைய மனைவி வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் இல்லை என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை.

மனைவி இல்லை என்றாலும், மனைவி கணவனுக்கு மாறுபட்ட கடுமையான சொற்களைச் சொன்னாலும் அந்த வீடு புலி தங்கிய புதர்போல் ஆகிவிடும்.

கருத்து:

நற்குண நற்செய்கைகளை உடைய மனைவி இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடு ஆகும். அவ்வாறு இல்லாத வீடு புதர்களும், மிருகமும் உள்ள காடேயாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Feb-19, 8:22 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 130

சிறந்த கட்டுரைகள்

மேலே