செம்மொழி

செம்மொழி



பஃறுளி ஆற்றங்கரையில் சரித்திரம்

படைத்திடப் பிறந்திட்டாய் !

பாண்டியர் தொன்மதுரையில்

பாதம் பட தவழ்ந்திட்டாய் !

நன்நூல் தொல்காப்பிய மாலைகளை

நன்முறையில் அணிந்திட்டாய் !

நானிலம் போற்றிட

நல்வாழ்வு வாழ்ந்திட்டாய் !

புலவர்களின் கவிமாமழையில்

புத்துணர்ச்சியோடு நனைந்திட்டாய் !

புவியெங்கும் செந்தமிழ்

பூ மணம் கமழ செய்திட்டாய் !

இலக்கிய இதிகாசக் கனிகளை

இன்பமுடன் சுவைத்திட்டாய் !

இளமை மாறாமல்

இப்புவியில் வாழ்ந்திட்டாய் !

வாழ்க! எம் தமிழே !

வளர்க! எம் செந்தமிழே!



-பாரியூர் தமிழ்க்கிளவி

எழுதியவர் : பாரியூர் தமிழ்க்கிளவி (24-Feb-19, 3:48 pm)
சேர்த்தது : PULAVARSUMATHI
பார்வை : 312

மேலே