நம் காதல்
இரவுப் பூக்கள் கதிரவனை வரவேற்கும் தருணம்..! தென்றலின் தூரல்களில் நம் மனதோ "மகிழம்பூக்களாய்"..,
உன் அருகாமையில் என் யுகப்பயணங்களின் வானிலை...
உன் நெருக்கங்களும் நெருடல்களும் என் புதுஉலகப் பூக்காட்டில் பூத்த வசந்த மலர்கள்...
இடையிடையே நம் உரையாடல்கள்.., படர்ந்து ஓய்ந்த மழையின் வானிலைகளாய் உன் செல்ல கொஞ்சல்கள்..!
எதுவரை போவதென்றே புரியாத நம் அன்பில் சற்றே குழம்பித்தான் போனது பாதைகளும்..!
கடக்கும் நொடிகள் ஒவ்வொன்றிலும் உன் நெருக்கங்கள் வேண்டியே பயணிக்க என்னும் என் மனம்..,
பிரிய மனமில்லாமல் உன் இமைகள் என்னை அனைத்துக்கொண்ட நிமிடங்களில் தோற்றேனடா உன்னிடம்...
என் கரம்பற்றி எனைப்பார்த்த உன் ஒற்றைப் பார்வைகளில் தொலைத்தேன் என்னையும் என் மனதையும்..!
மழலையின் பிடிவாதமாய் உன் வீட்டுச் செடியில் நான் பூக்க எண்ணிய தருணங்களில்.., என்னுள் நீ...