வானவில்
வானில் வந்த வானவில்லைக் கண்டு
என்னவள் மண்ணில் ரங்கோலியாய்
வரைந்தாளே வானவில்லை-அதன்
வண்ண எழிலைக்கண்டு நாணியதோ
வானவில், என்னவள் கோலம் முடித்து
வானைப் பார்க்கையில் அவ்வில்லை
மீண்டும் கண்டு தன் கோலத்தோடு
ஒப்பிட எண்ணி,, காணாமப்போனதே வானவில் !