காதல்
அந்தி சாய்ந்தது வானமும் மஞ்சளானது
அல்லி நான் உனக்காக காத்திருக்கிறேன்
பூஞ்சோலைசூழ் தடாகக் கரையினிலே;
காத்திருந்து காத்திருந்து கால்கள் கடுத்தனவே
இன்னும் ஏன் நீ வரவில்லை என்மன்னவனே பாரங்கே மஞ்சள்
வானத்தை காரிருள் கவ்வியதே …. அதோ
கீழ்வானில் இருளைக்கிழித்து மேலெழும்பி
வந்துவிட்டான் தன்னொளி பரப்பி சந்திரனும்
தடாகத்து அல்லி மொட்டெல்லாம் முகமலர்ந்து
வெண்ணிலவுக்கு ஆர்ப்பரித்து வ்ருகைத் தந்திட - நீ ஏன்
இன்னும் வரவில்லை என் சந்திரரே , உமக்காக
காத்திருக்கும் உந்தன் அல்லி முகம் மலர