தண்டனை பெற்ற தமிழ்நாடு

தண்டனை பெற்ற நாடு இது
தமிழ்நாடு என்ற பெயரும் உண்டு
உலகத்தரம் கொண்ட நூலும் உண்டு
ஒப்பற்ற தலைவர்கள் ஆண்டதுண்டு
மூன்று திக்கிலும் பெரும் கடலுமுண்டு
முப்போகம் விளைவிக்க ஆறுமுண்டு
வித்தைகள் இங்கே விளைந்ததுண்டு
வேதனை தீர்க்க பல மூலிகையுண்டு
அனைத்துக்கும் தாயான மொழியுமுண்டு
ஆறுதல் அளிக்க மலையுமுண்டு
அதனுள் ஆர்ப்பரிக்கும் அருவியுமுண்டு
வசதிக்கு வளையா நீதியுண்டு
வம்புக்கு வந்தால் பெரும் துன்பமுண்டு
இன்றோ
வாழ்க்கைக்கு எதிரான மத்தியரசால் இன்று
வாசல் தோறும் பெரும் துன்பம் வந்து
வாடவைக்குது மக்களை இன்று .
_ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (15-Mar-19, 1:44 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 666

மேலே