தமிழ் வாழ்த்து

குறைவில்லா வளத்துடனே இளமையொடு வாழும்
***குன்றாத புகழோடு குவலயத்தை யாளும் !
நிறைவான இலக்கணந்தான் செம்மொழியைக் காக்கும்
***நிகரில்லா இலக்கியங்கள் உலகோரை யீர்க்கும் !
அறநெறியைப் புகட்டிநல்ல தாயாகத் தாங்கும்
***அறிவொளியைத் தான்கூட்டி அகவிருளை நீக்கும் !
சிறப்புகளை அளந்திடிலோ அதன்பெருமை நீளும்
***செம்மாந்த தமிழிங்கு யாம்பெற்ற பேறே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Mar-19, 1:00 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 73

மேலே