வெங்டாசலம்

தெளிந்த சிந்தை
நேர்கொண்ட பார்வை
நட்பு பேணும் பெருந்தன்மை
தடைக்கற்களைப் படிக்கற்களாய்
மாற்றும் பேராண்மை...
இது நண்பன் வெங்கடாசலம்..

கண்ணதாசனின் காரைக்குடி
இவனது ஊர்ப்பக்கம்...
கண்ணதாசனின் உலக நோக்கு
என்றும் இவன் பக்கம்..

வாழ்க்கை வாழ்வதற்கே
இவனது கொள்கை..
ரசிக்கத்தானே இந்த உலகு
இவனது கோட்பாடு...

இவனுக்கு...
ஏட்டுக்கல்வி எட்டியது...
அனுபவக் கல்வி ஒட்டியது...
அதனால் நினைத்ததெல்லாம்
இவனுக்குக் கிட்டியது...

அவர் சொன்னார்
இவர் சொன்னார்
என்பதில் நம்பிக்கை
இவனுக்கு இல்லை...
இவனுக்குப் பட்டதே
இவன் வழி.. அது தனி வழி...

நீண்ட காலம் போயின்
சிலரோடு பழகிய நாட்கள்
சில மறந்து போகிறது...
இவனோடு பழகிய நாட்கள்
எல்லாம் மனதில்
கல்வெட்டுகளாய் நீங்காமல்
நிலைத்து நிற்கிறது...

பிறந்தநாள் காணும்
வெங்கடாசலம்.. ஏழுமலையான்
வெங்கடாசலபதி அருள் பெற்று
பதினெட்டு படியோன்
ஆசி பெற்று இதுதான்டா வாழ்க்கை
என என்றும் போல்
இன்றும் வாழ்க...
இன்றுபோல் என்றும் வாழ்க..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

இனிய நண்பனே...
வாழ்க பல்லாண்டு
வளங்கள் எல்லாம் பெற்று...
😀👏👍🌹🍰🎂🙋‍♂

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (19-Mar-19, 11:40 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 195

மேலே