பிரியமனமில்லாமல்

காலடித்தடமாய் தடயங்களை
விட்டு சென்றாய்.....

திரும்பி வருவாய் என தடயங்களை சேகரித்து வைத்தேன்.....

இமைமூடினால் உன் காலடி
தடங்களின் ஒசை.....

சங்கீதமாய் நடமாடுகிறாய்...

உனை கண்டதும் உறக்கத்தில்
பிறை நிலாவாய் புன்னகை
என்முகத்தில்.......

கண் திறந்தால் எரிவிண்மீனாய் சடுதியில்
மறைகிறாய்.....

என் கனவுகளில் சங்கீதமாய்
உனை கண்டதும்......

கனவு கலைக்க மனம் இல்லாமல் உறங்குகிறேன்....

உனை பிரிய
......மனமில்லாமல்......

எழுதியவர் : சிவா பாலா (27-Mar-19, 7:46 pm)
சேர்த்தது : சிவா பாலா
பார்வை : 430

மேலே