ஈற்றடிக்கு வெண்பா

விண்பொய்க்க நீரின்றி வெந்துழல் கின்றோரின்
கண்ணீர் துடைக்கக் கருத்தாக - மண்ணுலகத்
தண்ணீர் தினத்தில் தவிப்படங்கும் வண்ணம்நீ
வண்ணவண்ண வெண்பா விரி.

பாலை நிலத்தெழிலைப் பச்சை வயல்வெளியை
நீலக் கடல்வனப்பை நீள்வனத்தைக் - கோலமிகு
விண்முட்டும் மாமலையை மெத்தப் புகழ்ந்தழகாய்
வண்ணவண்ண வெண்பா விரி.

மன்றாடி மைந்தனை வண்ணமயில் வாகனனைக்
குன்றத்தி லாடுங் குமரனை - அன்புடன்
எண்ணி வுளமுருகி இன்றேவெண் தாளெடுத்து
வண்ணவண்ணவெண்பா விரி.

புன்னை மரநிழலில் புல்லாங் குழலூதிக்
கன்னிய ருள்ளம் கவர்ந்திழுக்கும் - மன்னவனாம்
கண்ணன் எழில்முகத்தைக் கண்டதும் காதலொடு
வண்ணவண்ண வெண்பா விரி.

மலையேழு தாண்டியந்த மாதவனைக் கண்டால்
தொலைந்தோடும் வல்வினைகள் தோற்றே! - சிலைபோலும்
கண்மூடி மெய்மறந்த காட்சியை நெஞ்சிலெண்ணி
வண்ணவண்ண வெண்பா விரி.

( ஈற்றடி - கவிமாமணி ஹரிகிருஷ்ணன் அவர்கள்)

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (31-Mar-19, 11:15 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 23

மேலே