விஷம் முறிந்திட

பெருந்நோய் தீண்டாத வாழ்வே பேரின்ப வாழ்வு என்றறியாமல் சிற்றின்ப பெருந்நோய் விழுந்து பெருத்த மனிதர்கூட்டங்களா?
இல்லை, நீங்கள் ஆட்டுக் கூட்டங்களா?

மக்களாட்சி என்கிறீர்.
அதன் மகிமை அறிவிரோ?
செல்லாக் காசாய் உங்கள் குரைப்புகளில் எந்த அர்த்தமும் இல்லை என்றே உணர்கிறேன்.

பதவிக்காக ஒரு குரைப்பு,
கூட்டணிக்காக ஒரு குரைப்பு,
அதிகாரத்திற்காக ஒரு குரைப்பு,
எப்படி எத்தனை முறை குரைத்தாலும் உங்கள் இரைச்சலில் மயங்கிடேன்.
வாழ்க, ஒழிக என்றே கோஷமிடேன்.

செய்வதறியாத திக்கற்ற சுய அறிவற்ற சுய நலன் நாடும் கூட்டங்களால் நீங்கள் பெருங்கூட்டங்களாய் தென்படலாம்.
தனியாளாய் நான் நின்றாலும் தளர்ந்துவிடேன்.
இயற்கையின் பேரியக்கத்தில் ஆதிமூலத்தில் கட்டுப்பாட்டில்
எனது ஒவ்வொரு எழுத்துகளும் உங்கள் அறியாமையை ஒழித்து நற்சிந்தனைகளை உங்களில் விதைக்கவே முயற்சிக்கும்.

எல்லாம் ஆதிமூலமாகிய அருட்பெருஞ்சோதியின் விருப்பப்படி நிகழ, நான், எனது என்ற அகந்தையில் கோஷிக்கும், மேடைகளில் குரைக்கும், தலைவர்கள் என்ற பெயரில் நடமாடும் கூட்டங்கள் ஒழியும் நேரம் முன்னேறும் மக்களின் வாழ்க்கைத்தரம்.
விஷம் முறிந்திட விரைந்து அருள் தந்திடு அருட்பெருஞ்சோதியே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (1-Apr-19, 6:32 pm)
பார்வை : 724

மேலே