என்னவளே

என்னவளே.......
என் ஆதியும் அந்தமுமாய் ஆனவள்
என் முகம் நோக்கி மனம் அறிபவள்
என் புன்னகை கண்டு பூரிப்பவள்
என் வருகை தாமதமாகும் நொடிகளை
கழிந்திடுவாள் யுகங்களாய்....
என் இயக்கமாய் அழகின் உருவமாய்
அறிவின் சிகரமாய் இருப்பவள்...
என் வெற்றிக்காக தோல்வியை முன் வந்து ஏற்பவள்
பூமித்தாய்க்கு மட்டும் பொறுமையில் எப்போதும் போட்டியாய் இருப்பவள்!
என் கணித ஆர்வம் கண்டு
உன் அணிகலங்களும் படித்தன வங்கியில்!
என் கண்ணீர் கூட தோற்கும் நித்தம் நீ கண்ட வலிகளை எண்ணி.....
என்னவளே....
என் அன்னையே......என்றும் என் வேண்டுதல்
என் மகளாய் உன் பிறப்பு மறுபிறவியில் வேண்டும் என்பதே..........

எழுதியவர் : பரந்தாமன் (2-Apr-19, 5:15 pm)
சேர்த்தது : பரந்தாமன்
பார்வை : 494

மேலே